தமிழ்ப் பழமொழிகள்
101
காணிக்குச் சோம்பல், கோடிக்கு வருத்தம்.
காணி கவிழ்ந்து போகிறதா? காணி காணியாய்ச் சம்பாதித்துக் கோடி கோடியாய்ச் செலவழிக்கிறது.
- (கோணி கோணியாய்.)
காணிச் சோம்பல் கோடி கேடு.
- (கோடி வருத்தம். காணி. 1/84.)
காணி தேடிக் கோடி அழிப்பதா? 7905
- (அழிக்கிறது.)
காணி தேடினும் கரிசல் தேடு.
காணி நாணம், ஊண் நாணம் உயிர்க்கே சேதம்.
காணி மந்தம். கோடி துக்கம்.
காணியாளன் வீடு வேகும் போது காலைப் பிடித்து இழுத்த கதை:
காணியில் இல்லாததா கோடியில் வரப் போகிறது? 7910
காணியை நட்டபின் களத்தில் நிற்பதே நன்மை.
காணி லாபம், கோடி நஷ்டம்.
காத்திருந்த நாய்க்குக் கல்லெறிதான் மிச்சம்.
காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்.
காதம் ஓடினும் முயலுக்குக் கைத்துாக்கு. 7915
காதம் கொடுத்து இரு காதம் வாங்குகிறது போல.
காதம் போனாலும் கண்ணுக்கு உரியவர் வேண்டும்.
காதம் விட்டு இரு காதம் சுற்றுவது போல.
காதலரோடு ஆடார் கவறு.
காத வழிதான் குத்தும் வெட்டும்; அப்புறம் ராமராஜ்யம் 7920
காத வழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமானம்.
- (தண்டலையார் சதகம்.)
காத வழி போய் அறியாதவன் மாதம் எல்லாம் நடந்தானாம்.
காத வழி போய் அறியான் கழுதைப் பிறப்பு.
காதில் கடுக்கன் இட்டால் முகத்தினுக்கு அழகு.
காதில் கேட்டதும் பொய்; கண்ணில் கண்டதும் பொய்; தீர விசாரிப்பதே மெய். 7925