பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தமிழ்ப் பழமொழிகள்


காதில் சிலந்தி, ஓதடி ஆனந்தி.

காதில் நாராசம் காய்ச்சி விட்டது போல.

காது அற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே.

(கூட வராது, பட்டினத்தார் பாடல்.)

காது அறுத்த கூலி கை மேலே.

காது அறுத்தாலும் அறுக்கும், பேன் எடுத்தாலும் எடுக்கும் குரங்கு. 7990


காதுக்கு இட்டால் முகத்துக்கு அழகு.

காதுக்குக் கடுக்கன் இட்டு ஆட்டிக் கொண்டு திரிகிறான்.

காதுக்குக் கடுக்கன் முகத்துக்கு அழகு.

காதுக்குக் கம்மல் அழகு.

காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான். 7935


காது காது என்றால் நாதி நாதி என்கிறான்.

(நாதி-என்னுடையது. தெலுங்கு.)

காது காது என்றால் வேது வேது என்கிறான்.

(வேது வேது.)

காது குத்த மனம் பொறுக்காதா?

காது குத்துகிறான்.

காதும் காதும் வைத்தாற் போல. 7940

(காதோடு காதோடு.)


காதுரா காதுரா என்றால் நாதிரா நாதிரா என்கிறான்.

(இரு பொருள்.)

காதை அறுத்தவன் கண்ணைக் குத்தாமல் விட்டானே!

காதை அறுத்தவன் கண்ணைக் குத்தினாலும் குத்துவான்.

காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா?

காதை அறுத்தாலும் அறுக்கும்; பேனை எடுத்தாலும் எடுக்கும் குரங்கு. 7945


காதை அறுத்தாலும் அறுத்தது; பேனைப் பார்.

காதைக் கடிக்கிறான்.

காதோடு காது வைத்தாற்போல் இருக்க வேண்டும்.