பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

103


காந்தத்தின்முன் ஊசி கம்பித்தாற் போல.

காந்தம் இழுத்த ஊசியைப் போல. 7950


காந்தமும் இரும்பும் போல.

காந்தமும் ஊசியும் போல.

காந்தலே ருசி; கறுப்பே அழகு.

காந்தாரி கண் பட்டால் கல்லும் கரிந்து விடும்.

காந்துார் நாயும் களத்துார்ப் பேயும். 7955

(மிகுதி. செங்கற்பட்டுப் பகுதி.)


காப்பானுக்குக் கள்ளம் இல்லை.

காப்புச் சொல்லும் கை மெலிவை.

காப்பு இட அத்தை இல்லை; கலகமிட அத்தை உண்டு; தண்டை இட அத்தை இல்லை; சண்டை இட அத்தை உண்டு.

காப் பொன்னிலும் மாப் பொன் திருடுவான்.

காமத்துக்குக் கண் இல்லை. 7960

(கண் தெரியாது.)


காமனுக்குக் கண் இல்லை.

(திருவாலவாய்ப் புராணம், 45:7)

காமாட்டிப் பையனுக்கு ஒரு சீமாட்டி கிடைத்தது போல.

காமாலைக் கண்ணனுக்குக் கண்டது எல்லாம் மஞ்சள்.

கா மாறிக் கட்டினால் கனம் குறையுமா?

(யாழ்ப்பான வழக்கு.)

காமிக்கு முறை இல்லை, 7965


காமுகனுக்குக் கண்ட இடத்தில் கண்.

காய்க்கு அலைந்தவன் பீர்க்குப் போடு.

காய்க்குக் கொடி இளைக்குமா?

காய் கொடிக்குக் கனமா? காய்ச்சல் இல்லா நிலம் கடுகளவும் பயன் கொடாது. 7970


காய்ச்சலும் கழிச்சலும் சேர்ந்து விட்டால் நம்பப் படாது.

காய்ச்சிக் காய்ச்சித்தானே நீட்ட வேண்டும்?