104
தமிழ்ப் பழமொழிகள்
காய்ச்சிக் குடிக்கிறதையும் கெடுத்தான், கன்னாரப் பட்டு விழுவான்.
- (கன்னாரச் சொட்டன்.)
காய்ச்சித் தோய்த்த தயிரைக் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டாயே!
காய்ச்சி வார்த்த பெண்ணுக்குப் பேச்சு மூச்சு அற்றது. 7975
காய்ச்சின கஞ்சி வார்க்க ஆள் இல்லாமல் போனாலும், கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
காய்ச்சினவள் காய்ச்சினால் கழுதை மூத்திரமும் ருசியாய் இருக்கும்
காய்த்த கொம்பு பணியும்.
காய்த்த மரத்தில் கல் எறிபடும்; காயாத மரத்தில் எறிபடுமா?
காய்த்த மரத்திலே கல் எறியும் சில் எறியும். 7980
- (கல்லடியும் சில்லடியும்.)
காய்த்த மரம் கல் அடிபடும்.
காய்த்த மரம் வளைந்து நிற்கும்; நற்குணமுடையவர் தணிந்து நிற்பார்.
- (பணிந்து.)
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ?
- (அருட்பா.)
காய்த்த மரம் வளையும்.
காய்ந்த இரும்பு குடித்த நீரை விடாது. 7985
காய்ந்த ஒட்டிலே தண்ணீரை ஊட்டினாற் போல.
காய்ந்த ஓட்டுக்குச் சேதம் இல்லை.
காய்ந்த கொம்பு பணியும்.
காய்ந்த சுண்ணாம்பையும் வதங்கின வெற்றிலையையும் இளைத்த ராஜாவையும் விடக் கூடாது.
காய்ந்த புலி ஆட்டு மந்தையில் விழுந்தது போல. 7990
காய்ந்த புலி ஆவிலே விழுகிறது.
காய்ந்த மரம் தளிர்க்குமா?
காய்ந்த மாடு கம்பில் புகுந்தாற் போல.
- (கம்பங் கதிரில்.)