பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

105


 காய்ந்த வானம் பெய்தால் விடாது,

காய்ந்த வித்துக்குப் பழுது இல்லை. 7995


காய்ந்த வெள்ளத்தில் விழுந்த பூனை பச்சை வெள்ளத்தைக் கண்டாலும் பேடிக்கும்,

(வெள்ளம்-நீர், பேடிக்கும்-அஞ்சும்.)

காய்ந்த வெற்றிலையையும் மெலிந்த ராஜாவையும் கைவிடாதே.

காய்ந்தால் காயும் கார்த்திகை.

காய்ந்தாலும் கவலை; பேய்ந்தாலும் கவலை.

காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ? 8000


காய்ந்து கெட்டது பிசானம்; காயாமல் கெட்டது கார்.

காய்ந்து போன கார்த்திகை வந்தால் என்ன? தீய்ந்து போன தீபாவளி வந்தால் என்ன? மகாராஜன் பொங்கல் வந்தால் மார்பு முட்டும் சோறு.

காய்ந்தும் கெடுத்தது வெயில்; பேய்ந்தும் கெடுத்தது மழை.

காய்ப் பாரத்தைக் கொடி தாங்காதா?

(தாங்கும்.)

காய் பறிக்கக் கத்தரி நடு. 8005


காய் மகாரன் நெஞ்சிலே கொள்ளிக் கட்டையால் சுடவேண்டும்.

காய சித்தி பெற்றோர் சட்டை கழற்றுவது போல.

காயத்திரி ஜபத்துக்குச் சமர்த்தியும் சமைக்க மாட்டாள்.

காயம் என்ன கற்கண்டா? உயிர் என்ன தித்திப்பா?

(உயிர் என்ன வெல்லமா?)

காயாகக் காய்த்துப் பூவாகப் பூத்ததாம். 8010


காயா? பழமா?

காயிலே கெட்டது கத்தரிக்காய்.

காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாதம் கல்யாணம்.

(காயும் கறியும்.)

காயும் பயிருக்குப் பெய்யும் மழை போல.

காயும் பழமும் கலந்தது போல். 8015