பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தமிழ்ப் பழமொழிகள்


 கால் எட்டினால் காகுழியில் போடு. 8100

(நெசவாளர் வழக்கு.)

கால் ஒடிந்த கோழிக்கு உரற்குழியே கைலாசம்.

கால் காசுக்குக் குதிரை வாங்க வேணும்; அது காற்றாகவும் பறக்க வேணும்.

(கால் துட்டுக்கு.)

கால் காசு தாலி கட்டாதவனும் காலில் விழாத பிள்ளையும் பிரயோசனம் இல்லை.

கால் காசுப் பூனை முக்காற் காசுத் தயிரைக் குடித்தது.

கால் காசு பெறாது. 8105


கால் சிறிது ஆகில் கண் ஊரும்; கன்னியர்மேல் மால் சிறிது ஆகில் மனம் ஊரும்.

(ஊறும்.)

கால் துட்டுக்குப் பசு வாங்க வேணும்; அது கால்படி பால் கறக்க வேணும்.

கால் தூக்குகிற கணக்கப் பிள்ளைக்கு மாசம் பத்து ரூபாய்.

கால் தூசு பெற மாட்டார்கள்.

கால் நடைக்கு இரண்டு காசு, கைவீச்சுக்கு ஐந்து காசு. 8110


கால் படி அரிசி இருந்தால் கஞ்சி, அரைப் படி அரிசி இருந்தால் அன்னம்.

கால் படி அரிசிக்காரன் உள்ள மட்டுந்தான்.

கால் பணத்துக் குரங்கு முக்கால் பணத்து வாழைப்பழம் தின்றதாம்.

கால் பாடகம் கழன்று விடுமோ?

கால் போகா இடத்தில் தலையிட்டுக் கொள்ளாதே. 8115

(கொள்ளுகிறதா?)


கால்மாடு, தலைமாடு தெரியாதவன்.

கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா?

கால் வந்து சூழக் கரி வந்து சூழ்ந்தது.

கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா?

கால கதியை ஆரும் கடக்க மாட்டார்கள். 8120


கால சக்கரம் சுழல்கிறது.

காலத்தில் ஒட்டை அடைக்கப்படாவிட்டால் கப்பலும் முழுகிவிடும்.

காலத்தில் பயிர் செய்தால் கடன் வாங்க வேண்டாம்.