பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

113


 காலில் பட்ட பீ மூஞ்சிக்கு வந்தாற் போலே.

காலில் விழுகிறது நல்லது; மேலில் விழுகிறது கெட்டது. 8175


காலுக்கு ஆகாத செருப்பைக் கழற்றி எறி.

(உதவாத செருப்பை)

காலுக்கு ஆகிற செருப்புத் தலைக்கு ஆகுமா?

காலுக்கு என்றால் தலைக்கு இடுவான்.

காலுக்குக் கடுப்பே தவிரக் கண்ட பலன் ஒன்றும் இல்லை.

காலுக்குக் கண் வேண்டுமா? 8180


காலுக்குக் கை உதவி, கைக்குக் கால் உதவி.

காலுக்குச் சேராத செருப்பைக் கழற்றி எறிய வேண்டும்.

காலுக்குத் தக்க செருப்பும் கூலிக்குத் தக்க உழைப்பும்.

காலுக்குப் போட்டால் தலைக்குப் போடுகிறான்.

காலும் இல்லாமல் தலையும் இல்லாமல் பேசுகிறான். 8185


காலும் தலையும் சாமி குடுமியும் போல.

காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றிக் குறுகி நடந்தவர் கோலை விட்டுக் குலாவி நடப்பரே.

காலை உப்பலும் கடும்பகல் வெயிலும் மாலை மேகமும் மழைதனில் உண்டு.

காலைக் கடம்பர், மத்தியான்னச் சொக்கர், அந்தித் திருவேங்கிநாதர், அர்த்தஜாமம் சிம்மபுரீசுவரர்.

(கருப்பத்தூர்.)

காலைக் கல், மாலைப் புல், 8190


காலைக் குளி மாதம் தாங்கும்; நடுப்பகல் குளி வாரம் தாங்கும்;

அந்திக் குளி அன்றைக் குளி.

(எண்ணெய் தேய்த்துக் கொள்ள.)

காலைக் கடன் வாங்கச் சொல்லும்; அந்தி ஆனை கட்டச் சொல்லும்,

(பயிரின் நிலை. காலையில் வாட்டம். மாலையில் செழிப்பு.)

காலைக் கூழைத் தள்ளாதே; கம்மாளன் வரவைக் கொள்ளாதே.

(காயைலக் குழையது. காலைப் பழையது.)

காலைக் கேட்டுக் கொண்டா நடக்கிறது?

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் ஒழிய விடாது. 8195

(கடியாமல் விடாது.)