பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

115


 காவேட்டி ரங்கனுக்கு வைப்பாட்டி இரண்டாம்.

காவேரிக் கரைப் பசுப் போல் அலைகிறான்.

காவேரி கடவாக் கந்தாடை அண்ணன்.

(காவிரி)

காவேரித் தண்ணீர் குடித்தவனுக்குச் சாவேரி ராகம் கஷ்டமா?

காவேரி ஆறு கரை புரண்டு போனாலும் வீராணத் தேரி விதை முதலுக்குக் கட்டாது. 8225


காவேரி ஆற்றை மறிப்பாய்; கார்த்திகை மாதத்துக் கர்க்கடகச் சந்திரனையும் மறிப்பாயா?

காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கவேன்டும்.

காவேரி பாதி, கர்ணன் பாதி.

காவேரியைப் போல நதி இல்லை; சாவேரியைப் போல ராகம் இல்லை.

காவோலை விழுந்ததென்று குருத்தோலை சிரித்ததாம். 8230


காழி பாதி, வீழிபாதி

(தேவாரம் வீடு திருவீடுமீழலை)

காளை தேட, சோமன் அழிக்க, சுந்தரன் சுகிக்க.

(காளையார் கோயிலில் 3 கோயில்கள். காமேசுவரர், சொர்ணவல்வி இவர் மேல், சோமேசுவரர் செளந்தரிய நாயகி அலங்கார விசேஷம். சுந்தரேசர், மீனாட்சி நிவேதன விசேஷம்.)

காளவாய்க்கு மழையும் கைம்பெண்டாட்டிக்குப் பிள்ளையும்.

காளி தோட்டத்துக் கற்பக விருட்சம் ஆருக்கும் உதவாது.

காளிப் பட்டம் போனாலும் மூளிப் பட்டம் போகாது. 8235


காளியோடு பிறந்த மூளி, மூளியோடு பிறந்த காளி.

காளை ஈன்றதென்று கேட்குமுன்னே கயிறு எடு என்றானாம்.

காளை கட்டிக் கார் உழவை ஒட்டு.

காளை போன வழியே கன்று போகும்.

(கயிறு போகும்.)

காளை மாடு ஆனாலும் கன்றுக்கு உழக்குப் பால் தா என்றானாம். 8240


காளையைக் கட்டுத் தறியில் விட்டுவிட்டு மேயும் இடத்தில் பிடிக்க முடியுமா?

காற்றில் அகப்பட்ட இலவம் பஞ்சு போல.