10
தமிழ்ப் பழமொழிகள்
ஒரு கை முழம் போடுமா? 5945
ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா?
ஒரு கோமுட்டியைக் கழுவில் போட்டதற்கு ஒன்பது கல எள் ஆச்சுதே; ஊர்க் கோமுட்டிகளை எல்லாம் கழுவில் போடு, என்றானாம்.
ஒரு சந்திப் பானையை நாய் அறியுமா?
ஒரு சாதிக்கு ஏச்சு: ஒரு சாதிக்குப் பேச்சு.
ஒரு சாண் காட்டிலே ஒருமுழத் தடி வெட்டலாமா? 5950
ஒரு சுருட்டைப் பத்து நாள் பிடிப்பான்.
ஒரு சுற்றுச் சுற்றி வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டது போல,
ஒரு கூடைச் செங்கலில் அத்தனையும் வேகாத செங்கல்,
ஒரு செடியிலே விளைந்தாற் போல்.
ஒரு செவியில் வார்த்தாற் போல. 5955
ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகிறது இல்லை.
- (ஒருத்தர் போக.)
ஒருத்தன் ஜோலிக்குப் போகவும் மாட்டேன்: என் காலை மிதித்தால், விடவும் மாட்டேன்.
ஒருத்திக்கு ஒருமகன்.
- (திருவிளையாடற் புராணம்.)
ஒரு தட்டில் ஒர் ஆனை மறுதட்டில் ஆயிரம் பூனை.
ஒரு தம்படி மிச்சப்படுத்தியது ஒரு தம்படி சம்பாதித்தது ஆகுமா? 5960
ஒரு தரம் விழுந்தால் தெரியாதா?
ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?
ஒரு தலை வழக்கு நூலிலும் செவ்வை.
- (செம்மை.),
ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊர் எல்லாம் தாய்.
- (அற்றவருக்கு.)
ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை. . 5965
ஒரு துட்டு ஒரு ரூபாயாய் இருக்கிறது.
ஒரு துரும்பு பழுதை ஆகுமா?.
- (துரும்பும்.)