தமிழ்ப் பழமொழிகள்
135
- (கூழைச்சிக்கு இரண்டு கொழுக்கட்டையே.)
குதிரை இருப்பு அறியும்; கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
- (கொண்டவன் குணம் அறிவாள் பெண்டாட்டி.)
குதிரை இல்லாத ஊருக்குக் கழுதை தம்பிரான். 8680
குதிரை உதைத்தாலும் உதைக்கலாம்; கழுதையா உதைக்கிறது?
- (கழுதை உதைக்கலாமா?)
குதிரை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.
குதிரை ஏற அதிருஷ்டம் இருந்தால் கொண்டு ஏற வேண்டுமா?
- (குண்டை ஏறவேண்டுமா?)
குதிரை ஏறாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
குதிரை ஏறி என்ன? கோணல் கொம்பு ஊதி என்ன?
வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம். 8685
குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்கிறான்.
- (குர்ரம்- குதிரை: தெலுங்கு.)
குதிரைக்குக் குளம்பு கொடுத்தவன் கொம்பு கொடுக்கவில்லை.
குதிரைக்குக் கொம்பு முளைத்தாலும் நாய்க்கு வால் நிமிராது.
குதிரைக் குணம் அறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
குதிரைக்குப் படை கட்டினாற் போல. 8690
- (பட்டை.)
குதிரைக்கும் நாய்க்கும் குடி போகச் சந்தோஷம்.
குதிரைக்கு வால் இருந்தால் குண்டி மட்டும்.
குதிரைக் கொம்பு
- (+ ஆகிவிட்டது.)
குதிரை கீழே தள்ளியதோடு குழியையும் பறித்ததாம்.
குதிரை குட்டி போடுகிறது, குட்டி போடுகிறது என்று லத்தி போட்டதாம். 8695
- (ஆனை குட்டி போடுகிறது.)
குதிரை குருடாக இருந்தாலும் கொள்ளுத் தின்கிறதில் குறைச்சல் இல்லை.
- (தின்னும் கொள் முக்குறுணி.)
குதிரை குருடாக இருந்தாலும் நித்திரையிலே குறை இல்லை.
குதிரை செத்ததும் அல்லாமல் குழி தோண்ட மூன்று பணம்.
- (பத்துப் பணம்.)