தமிழ்ப் பழமொழிகள்
143
குரங்கு சொறிந்தால் புண் ஆகும்.
குரங்கு தன் அழகைப் பார்க்கக் கண்ணாடி தேடியதாம்.
குரங்கு தன் குட்டியின் கையைக் கொண்டு பதம் பார்க்கிறது போல. 8865
- (அடுப்பின் தீயைச் சோதித்தது போல.)
குரங்கு தாவுகிற தாவிலே குட்டியை மறக்குமா?
குரங்கு தீவட்டி பிடித்தாற் போல.
குரங்கு நியாயம்.
குரங்குப் பிடி, கரும்புப் பிடி.
குரங்குப் பிடிபோல் பிடிக்க வேண்டும். 8870
- (குரங்குப் பிடியாய்ப் பிடிக்கிறது.)
குரங்குப் பிடி போன்ற பிடிவாதம் பிடிக்காதே.
குரங்குப் பிடியும் குழந்தைப் பிடியும்.
குரங்குப் பிணமும் குறப்பிணமும் கண்டவர் இல்லை.
- (குறவன் சுடுகாடும்.)
குரங்குப் பீயை மருந்துக்குக் கேட்டால் கொம்புக்குக் கொம்பு தாவுமாம்.
குரங்குப் புண் ஆறாது. 8875
- (பிரம்மாண்டம்.)
குரங்குப் புத்தி.
குரங்கு பிடித்த பிடியை விடாது; நாய் கடித்த கடியை விடாது.
குரங்கு பேன் பார்த்தாலும் பார்க்கும்; காதைப் பிய்த்தாலும் பிய்க்கும்.
குரங்கும் உடும்பும் பிடித்தது விடா.
குரங்கு மரத்தில் ஏறும்; குழந்தை இடுப்பில் ஏறும். 8880
குரங்கு மழையில் நனைந்தாலும் நனையும்; குடிசையில் போய் ஒண்டாது.
குரங்கு முகத்துக்குப் பொட்டு எதற்கு?
குரங்கு முகம் எல்லாம் ஒரு முகம்; கூத்தாடி பேச்செல்லாம் ஒரு பேச்சு.
குரங்கு வாழைப்பழத்தை கண்டால் சும்மா விடுமா?
குரங்கு விழுந்தால் கூட்டத்துடன் சேராது. 8885