பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

173


கையில் அரைக் காசுக்கும் வழி இல்லாத அஷ்ட தரித்திரம், கையில் இருக்க நெய்யிலே கைவிடுவானேன்? 9530


கையில் இருக்கிற கனியை எறிந்து மரத்தில் இருக்கிற கனியைத் தாவுகிறது போல.

(கனியை விட்டு விட்டு.)

கையில் இருக்கிற குருவியை விட்டு விட்டுப் பறக்கிறதற்கு ஆசைப்பட்டாற் போல்.

கையில் இருக்கிற சோற்றைப் போட்டு விட்டு எச்சிற் சோற்றுக்குக் கை ஏந்தினது போல.

கையில் இருக்கிற பறவையை விட்டு விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?

கையில் இருந்தால் கடை கொள்ளலாம். 9535

(செல்லலாம்.)

கையில் இருந்தால் கர்ணன்.

கையில் இருந்தால் பாக்கு: கையை விட்டால் தோப்பு.

கையில் இருப்பது செபமாலை; கட்கத்தில் இருப்பது கன்னக்கோல்.

கையில் இல்லாதவன் கள்ளன்.

(இல்லா விட்டால்.)

கையில் இல்லா விட்டால் கண்டாரும் பேச மாட்டார்; கேட்டாரும் மதிக்க மாட்டார். 9540

(கண்டாரும் மதிக்க மாட்டார்கள்.)


கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

கையில் உள்ள களப்பழம் மரத்தில் உள்ள பலாப்பழத்துக்கு மேல்.

கையில் எடுக்குமுன் கோழி மோசம் என்று அறியாது.

கையில் எடுப்பது ஜபமாலை; கட்கத்தில் வைப்பது கன்னக்கோல்.

கையில் ஒரு காசும் இல்லை; கடன் கொடுப்பார் ஆரும் இல்லை. 9545

(+ தேவடியாள் வீட்டைக் கண்டால் துக்கம் துக்கமாய் வருகிறது.)


கையில் காசு இருக்கக் கறிக்கு அலைவானேன்?

கையில் காசு இருந்தால் அசப்பில் ஒரு வார்த்தை வரும்.