பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

179


கொட்டிக் கொட்டிக் குளவி புழுவைத் தன் நிறத்துக்கு ஆக்கி விடும்.

கொட்டிய பாலின் முன் கூவி அழுது ஆவதுண்டா?

கொட்டினால் தேள்; கொட்டா விட்டால் பிள்ளைப்பூச்சி.

கொட்டும் பறை தட்டம் அறியாது.

கொட்டை நூற்கிற அம்மாளுக்குப் பட்டணம் விசாரிப்பது ஏன்? 9655

(பட்டணத்து விசாரணை.)


கொட்டை நூற்கும் கூனற் கிழவி.

கொட்டை நூற்றுச் சம்பாதித்துக் கெட்டுப் போயிற்றா?

கொட்டோடே முழக்கோடே வந்தவன் எட்டோடே இழவோடே அல்லவா போவான்?

(எட்டாம் நாள் படைக்கும் நாள். சோழநாட்டு வேளாளரிடையே வழங்குவது. }

கொடாக் கண்டன், விடாக் கண்டன்.

கொடாக் கண்டனும் விடா கண்டனும் கூடினாற் போலே. 9660


கொடாத இடையன் சினை ஆட்டைக் காட்டினது போல.

கொடாதவன் எருமைப் பாலும் கொடான்.

கொடாதவனுக்குக் கூத்துப் பறி; இடமாட்டாதவனுக்கு எச்சில்.

கொடிக் கம்பத்தைப் பயற்றங்காயாய்த் திண்பவருக்குக் கோபுரம் கொழுக்கட்டை.

கொடிக் காலில் மின்னினால் விடிகாலை மழை. 9665


கொடிக்குக் காய் கனமா?

(பாரமா?)

கொடிக்குக் கும்மட்டிக் காய் கனத்திருக்குமா?

கொடிக்குச் சுரைக்காய் கனமா?

(கனக்காது.)

கொடிகள் அருகான மரத்திலே படரும்.

(அருகிலுள்ள மரத்திலே தாவும்.)

கொடி சுற்றிப் பிறந்த பிள்ளை குலத்திற்கு ஆகாது. 9670

(பெண் பிறந்தால்.)

கொடிசுற்றிப் பிறந்தால் கோத்திரத்துக்கு ஆகாது.

கொடியும் பெண்டிரும் கொண்டதை விடார்.

கொடிறும் பேதையும் கொண்டது விடா.