பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தமிழ்ப் பழமொழிகள்


கொம்பால் உழுது கொண்டியால் பரம்படி.

கொம்பில் ஒரு நெல் விளைந்தாலும் சம்பாவுக்கு இணை ஆகாது.

(ஈடு.)

கொம்பு முளைக்காத ஆனைக்குத் தும்புக் கயிறு தொண்ணுாறு. 9815


கொய்யா வனத்துக்குக் குரங்கைக் காவல் வைத்தானாம்.

கொய்யாது குவியாது பசியாது.

கொல்லத்தில் குறுணி விற்றாலும் இல்லத்துக்குச் சுகம் வருமோ?

கொல்லத்துக்காரன் மேற்கே பார்ப்பான்; கூத்துக்காரன் கிழக்கே பார்ப்பான்.

கொல்லத் தெருவில் ஊசி விற்றாற் போல. 9820

(விற்பதா?)


கொல்ல வரும் ஆனை முன்னே கல்லை விட்டெறியாதே.

(யானையை..}

கொல்லன் உலையில் கொசுவுக்கு என்ன வேலை?

(அலுவல். )

கொல்லன் எளிமை கண்டு குரங்கு தன் காலுக்குப் பூண் கட்டச் சொன்னதாம்.

கொல்லன் களத்திலே ஈக்கு என்ன வேலை?

கொல்லன் கைக் குறடுபோல. 9825


கொல்லன் பிணம் விறைத்தாற் போல.

கொல்லனைக் கண்ட குரங்கும் பணி செய்யும்.

கொல்லனைக் கண்டால் குரங்கும் மல்லுக் கட்டச் சொல்லும்.

கொல்லுக் கொலைக்கு அஞ்சாத கொடும்பாவி.

(அஞ்சாத நெஞ்சு.)

கொல்லுவதும் சோறு; பிழைப்பிக்கிறதும் சோறு. 9830


கொல்லைக் காட்டில் நரியைக் குடிவைத்துக் கொண்டது போல.

கொல்லைக் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது போல.

கொல்லைக் கீரை மருந்துக்கு ஆகாது.

கொல்லைக்குப் பல்லி, குடிக்குச் சனி. 9835