தமிழ்ப் பழமொழிகள்
187
கொல்லை காய்ந்தாலும் குருவிக்கு மேய்ச்சல் உண்டு.
கொல்லை குறுணியாகிலும் சொன்ன குறுணி போமா?
கொல்லைத் தலைமாட்டில் இருப்பது போல.
கொல்லைப் பச்சிலை மருந்துக்கு உதவுமா?
கொல்லை பாழாய்ப் போனாலும் குருவிக்கு மேய்ச்சல் போச்சா? 9840
- (இரை பஞ்சமா? பாழானாலும்.)
கொல்லையில் குற்றியை அடைந்த புல் உழவன் உழுபடைக்குக் கெடுமா?
கொல்லொணாப் படை எவர்க்கும் வெல்லொணாது.
- (திருவாலவாய்ப் புராணம், 86:20)
கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சுவானா?
கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பாதே.
- (மலேயா வழக்கு.)
கொழுக்கட்டைக்குத் தலை பார்த்துக் கடிப்பார்களா? 9845
கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை; குடியனுக்கு முறையும் இல்லை.
- (குறவனுக்கு.).
கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குருதட்சிணை வேறா?
கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குருதட்சினை.
- (தின்ற பிள்யைாருக்கு.)
கொழுக்கட்டை தின்ற பூனைக்குக் குடுவை மோர் வரதட்சினை.
கொழுக் கட்டையை எடுத்து நாயை எறிந்தது போல. 9850
கொழுக் குத்தக் கூட இடம் கொடுக்க மாட்டான்.
கொழு கொம்பு இல்லாத கொடிபோல.
- ( + ஆனேன்.)
கொழுத்த ஆடு குட்டி போட்டாலும் உழுக்கட்டை வழுக்கட்டைதான்.
கொழுத்த ஆடு பார்த்துப் பிடிக்கிறதா?
- (கொழுத்தாடை.)
கொழுத்த பிணத்தை இழுத்து எறி. 9855
கொழுத்த மீன் தின்கிறவன் குருவிக் கறிக்கு அசிங்கப்படுவானா?
கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.
கொழுத்தவனுக்குக் கொள்ளும் இளைத்தவனுக்கு எள்ளும்.