பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

187


கொல்லை காய்ந்தாலும் குருவிக்கு மேய்ச்சல் உண்டு.

கொல்லை குறுணியாகிலும் சொன்ன குறுணி போமா?

கொல்லைத் தலைமாட்டில் இருப்பது போல.

கொல்லைப் பச்சிலை மருந்துக்கு உதவுமா?

கொல்லை பாழாய்ப் போனாலும் குருவிக்கு மேய்ச்சல் போச்சா? 9840

(இரை பஞ்சமா? பாழானாலும்.)


கொல்லையில் குற்றியை அடைந்த புல் உழவன் உழுபடைக்குக் கெடுமா?

கொல்லொணாப் படை எவர்க்கும் வெல்லொணாது.

(திருவாலவாய்ப் புராணம், 86:20)

கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சுவானா?

கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பாதே.

(மலேயா வழக்கு.)

கொழுக்கட்டைக்குத் தலை பார்த்துக் கடிப்பார்களா? 9845


கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை; குடியனுக்கு முறையும் இல்லை.

(குறவனுக்கு.).

கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குருதட்சிணை வேறா?

கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குருதட்சினை.

(தின்ற பிள்யைாருக்கு.)

கொழுக்கட்டை தின்ற பூனைக்குக் குடுவை மோர் வரதட்சினை.

கொழுக் கட்டையை எடுத்து நாயை எறிந்தது போல. 9850


கொழுக் குத்தக் கூட இடம் கொடுக்க மாட்டான்.

கொழு கொம்பு இல்லாத கொடிபோல.

( + ஆனேன்.)

கொழுத்த ஆடு குட்டி போட்டாலும் உழுக்கட்டை வழுக்கட்டைதான்.

கொழுத்த ஆடு பார்த்துப் பிடிக்கிறதா?

(கொழுத்தாடை.)

கொழுத்த பிணத்தை இழுத்து எறி. 9855


கொழுத்த மீன் தின்கிறவன் குருவிக் கறிக்கு அசிங்கப்படுவானா?

கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.

கொழுத்தவனுக்குக் கொள்ளும் இளைத்தவனுக்கு எள்ளும்.