பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

189


கொள்ளு வாசனை கண்ட குதிரை போல.

கொள்ளு வெள்ளாமை கொள்ளை வெள்ளாமை.

கொள்ளை அடித்துத் தின்கிறவனுக்குக் கொண்டு தின்னத் தாங்குமா? 9885


கொள்ளை இடப் போகிறவனுக்குக் குருடன் துணை ஆகுமா?

கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.

கொள்ளைக்கும் ஊழிக்கும் தப்பு.

கொள்ளைக்கு முந்து; கோபத்துக்குப் பிந்து.

கொள்ளைக் கூட்டத்துக்குத் தலை இல்லை; கூத்தாடிக்கு முறை இல்லை. 9890


கொள்ளைப் பறிக்கிறது; கொடுக்கப் பறக்கிறது; கொண்டவனைக் கண்டால் குடலைப் புரட்டுகிறது.

கொளிஞ்சி மிதித்தால் களஞ்சியம் நிறையும்.

கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி.

(அறியான்.)

கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

(சிறந்தவன்.)

கொன்றவனை விடக் கற்றவள் பெரியவன். 9895


கொன்ற பாவம் தின்றதில் போச்சு.

கொன்றாரைக் கொல்லும் அல்லால் கொலை விடாது.

கொன்றால் பாவம் தின்றால் போச்சு.

(தீரும்.)