இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ப் பழமொழிகள்
199
கோள் சொல்லிக் குடும்பத்தைக் கெடுத்தாலும் குடிவரி உயர்த்திக் கொள்ளை அடிக்காதே.
கோள் சொல்லிக் குண்டுணி.
- (குண்டுப் பெருமாள்.)
கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
கோளாற்றக் கொள்ளாக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்.
கோளாறு இல்லாத செட்டி கோவணத்தை அவிழ்ப்பானா? 10115
கோளுக்கு முந்தேன்; கூழுக்குப் பிந்தேன்.
- (உணவுக்கு)
கோளும் குறளையும் குலத்துக்கு ஈனம்.
கோளும் சொல்லிக் கும்பிடுவானேன்?
கோனான் கோல் எடுக்க நூறு ஆடும் ஆறு ஆடு ஆயின.
கோஷ்டியூர் காணாதவர் குரங்காய்ப் பிறப்பார். 10120