202
தமிழ்ப் பழமொழிகள்
சங்கூதிப் பண்டாரம், அங்கு ஊதி இங்கு வராதே, இங்கு ஊதி அங்கே போ.
- (பூஜை பண்ணும் பண்டாரத்தைப் பார்த்துச் சிவலிங்கம் சொன்னது.)
சங்கைச் சுட்டாலும் மங்குமா நிறம்?
சங்கோசம் விட்டால் சங்கையும் இல்லை.
- (சங்கோசம் இல்லையென்றால்.)
சட்டி ஓட்டை ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
- (வேக வேண்டும்.)
சட்டி சுட்டது; கை விட்டது. 10180
சட்டி திருடும் நாய்க்குப் பெட்டி பணம் எதற்கு?
சட்டி பாலுக்கு ஒரு சொட்டு மோர் பிரை.
சட்டி புழைக்கடையிலே; அகப்பை வாசலிலே.
சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும்?
சட்டியோடு அகப்பை தட்டாமல் போகுமா? 10185
சட்டியோடு தின்று பானையோடு கை அலம்புகிறது.
சட்டுவம் கறிச் சுவையை அறியுமா?
சட்டைக்காரன் நாயை எட்ட நின்று பார்.
சட்டைநாதபுரம் உழவு; சீகாழி இழவு: செம்மங்குடி வறட்டி.
- (எப்போதும் இருக்கும். சீகாழிக்கு 1 1/2 மைலில் உள்ளது செம்மங்குடி)
சடை கொண்ட இலுப்பையைத் தடிகொண்டு அடித்தாற்போல. 10190
சடை கொண்டு வெருட்டல் வேண்டா.
- (திருவால. 16:26.)
சடைத் தம்பிரான் சோற்றுக்கு அழுகிறானாம்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறதாம்.
- (சாற்றுக்கு.)
சடைத் தம்பிரான் தவிட்டுக்கு அழுகிறான்; லிங்கம் பரமான்னத்துக்கு அழுகிறதாம்.
சடைத் தம்பிரானுக்குச் சாதம் இல்லாதபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்? .
சடையைப் பிடித்தால் சந்நியாசி தன்னாலே வருவான். 10195
- (பிடித்து இழுத்தால். கிட்டே வருவான். தம்பிரான் கூட வருவார்.)
சண்ட மாருதத்துக்குமுன் எதிர்ப்பட்ட சருகுபோல்.
சண்டிக்கு ஏற்ற மிண்டன்.
- (முண்டன்.)
சண்டிக் குதிரைக்கு ஏற்ற மொண்டிச் சாரதி.
- (நொண்டிச் சாரதி.)