பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

205


சத்தியம் தலை காக்கும்.

சத்தியம் நண்ணலை. சாவைத் தினம் நினை. 10225


சத்தியம் வெல்லும், அசத்தியம் கொல்லும்.

சத்தியமே கொல்லும்; சத்தியமே வெல்லும்.

சத்தியமே ஜயம்.

சத்திய வாசகன் சமஸ்த சற்குணன்.

(நற்குணன்.)

சத்திரத்தில் இன்னும் நுழைய விடவில்லை; இலை கிழிசல் என்றானாம். 10230


சத்திரத்தில் சந்நியாசிக்குப் போஜனம், மடத்தில் நித்திரை.

சத்திரத்தில் சாப்பாடு; சாவடியில் நித்திரை.

(மண்டபத்தில் படுக்கை.)

சத்திரத்தில் சாப்பாடு; மடத்தில் நித்திரை.

சத்திரத்தில் சோறு இல்லை என்றால் இலை பீற்றல் என்றானாம்.

சத்திரத்துக் கூழுக்கு நாயக்கர் அப்பனையோ? 10235

(அப்பனை ஆணை.)


சத்திரத்துச் சாப்பாட்டுக்கு அப்பணையங்கார் சிபாரிசா?

சத்திரத்துச் சாப்பாட்டுக்குச் தாத்தையங்கார் அப்பனையா?

(உத்தரவா?)

சத்திரத்துச் சாப்பாட்டுக்கு நாயின் சிபாரிசா?

சத்திரத்துச் சோற்றுக்குத் தாத்தையங்கார் அப்பணையா?

(கூழுக்கு.)

சத்திரத்து நாயை அடித்தால் கேட்பார் யார்? 10240


சத்திரத்துப் பாட்டுக்குத் தெருப்பாட்டு மேலா?

(திருப்பாட்டு.)

சத்திரத்தைக் கட்டி நாயைக் காவல் வைத்தது போல.

சத்திரா போஜனம்; மடத்தில் நித்திரை.

சத்துக்களோடு சத்துக்கள் சேர்வர்: சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.

சத்துருக்களையும் சித்தமாய் நேசி. 10245


சத்துரு பகை; மித்துரு வதை.

சத்துரு பொறுமை தனக்கே தண்டனை.

(சத்துரு பெருமை.)

சத்துருவைச் சார்ந்து கொல்ல வேண்டும்.

சத்ரா போஜனம், மடா நித்ரா.

சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயோ என்கிறது போல. 10250