206
தமிழ்ப் பழமொழிகள்
சத சுவோகீ ஏக பண்டித.
சதி செய்கிறவர்களுக்குச் சமர்த்தர் என்று பெயர்.
சதுரக் கன்னியில் அகில் உண்டாகும்.
சதை இல்லாமல் கத்தி நாடுமா?
சதை உள்ள இடத்திலே கத்தி நாடும். 10255
சதை கண்டு கத்தி நாட வேண்டும்.
சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணம்.
- (சந்தடியோ சந்தடி)
சந்தம் இல்லாக் கவிக்கு அந்தம் இல்லை.
- (அந்தம்-அழகு.)
சந்தனக் கட்டை தேய்ந்தது; சாதமும் வடித்தாச்சு.
சந்தனக் கட்டை தேய்ந்தால் கந்தம் குறையுமா? 10260
- (குறைபடுமா?)
சந்தனக் கருடன் வந்த வழி போனால் கங்கையில் போட்டதும் தன் கைக் கூடும்.
சந்தனக் குறடு தேய்ந்தாலும் மணம் குறையாது.
சந்தனக்கோல் குறுகினாலும் பிரப்பங் கோல் ஆகாது.
சந்தனம் கொடுத்த சரஸ்வதி.
சந்தனம் தெளித்த கையாலே சாணி தெளிக்கலாச்சுது. 10265
சந்தனம் தேய்ப்பவன் அலைவது போலே.
சந்தனம் மிகுந்தால் பிட்டத்தில் பூசிக் கொள்கிறதா?
சந்தன மரம் போல் பிள்ளை; சம்பங்கிப்பூப் போல் பெண்.
சந்தன வாள் போல.
சந்தனவிருட்சக் காட்டிலே சர்ப்பம் இருக்கிறது போல. 10270
சந்திக்குச் சந்தி நாய் அடிபடுவது போல.
சந்திக்கும் பொறையாற்றுக்குமாக அலையாதே.
- (இருக்கிறான்.)
சந்தி சிரிக்கிறது.
சந்தியில் அடித்தால் சாட்சிக்கு ஆர் வருவார்.
சந்தியில் நிற்கிறது. 10275
சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
சந்திர சூரியர் உள்ள வரைக்கும்.
சந்திர சூரியர் உள்ள வரைக்கும் வார்த்தை பிசகான்.
சந்திரன் இல்லாத வானம் போல.
சந்திரன் இல்லா வானமும் மந்திரி இல்லா அரசும் பாழ். 10280