பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தமிழ்ப் பழமொழிகள்

 சந்நியாசிக்கு என்ன சம்சாரக் கவலை?

சந்நியாசிக்குச் சாப்பாட்டுக் கவலையா?

சந்நியாசிக்கும் பழைய குணம் போகாது.

சந்நியாசிக்கும் போகாது ஜாதி அபிமானம்.

சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சம்சாரம் மேலிட்டது போல. 10310


சந்நியாசி கோவணம் கட்டினது போல.

சந்நியாசி செய்த சத்திக்குள் அகப்பட்ட சடை.

(சடை.)

சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பதுதான்.

சந்நியாசி பிரயாணம் திண்ணை விட்டு இறங்கினால் ஆச்சு.

சந்நியாசி பூனை வளர்த்தது போல. 10315


சந்நியாசியார் சந்தையிலே கண்டவனே என்று ஆட்டினார்: தவசிப் பிள்ளை சந்நியாசியால் கண்டவனே என்று ஆட்டினான்.

சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம்; சந்நியாசிக்கு முன்னே மரணமாம்.

சந்தியாசியை நிந்தித்தவனுக்குப் பின்னாலே நரகமாம்.

சந்நியாசி வீடு திண்ணையிலே.

சப்தப் பிரம்மத்தில் அசப்தப் பிரம்மம் பிரகாசிக்கிறது. 10320


சப்தப் பிரம்மம் பரப்பிரம்மம், இரண்டையும் அறிய வேண்டியது.

சப்தம் பிறந்த இடத்திலே சகல கலைகளும் பிறக்கும்.

சப்த மேகங்களும் ஒன்று கூடி நெருப்பு மழை பெய்தாற்போல.

சப்பரத்துக்கு முன்னே வந்தாயா? பின்னே வந்தாயா?

சப்பாணிக்கு நொண்டி குடுகுடுப்பை. 10325


சப்பாணிக்கு நொண்டி சண்டப் பிரசண்டன்.

சப்பாணிககு விட்ட இடத்திலே கோபம்.

சப்பாணி மாப்பிள்ளைக்கு சந்து ஒடிந்த பெண்டாட்டி.

(பெண்சாதி.)

சப்பாணி வந்தால் நகர வேணும்; பல்லக்கு வந்தால் ஏறவேணும்.

சப்பை கட்டுகிறான். 10330


சபைக் கோழை ஆகாது.

சபையிலே நக்கீரன்; அரசிலே விற்சேரன்.

சம்சாரக் குட்டு, வியாதி ரெட்டு.

(ரெட்டிப்பு.)