பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தமிழ்ப் பழமொழிகள்


சமயம் வாய்த்தால் களவு செய்வான்.

சமயம் வாய்த்தால் நமனையும் பலகாரம் செய்வான். 10360


சமயம் வாய்த்தால் நமனையும் வெல்லலாம்.

சமர்த்தன் சந்தைக்குப் போனால் கொள்ளவும் மாட்டான், கொடுக்கவும் மாட்டான்.

(வாங்கவும் மாட்டான்.)

சமர்த்தன் பெண் சதியும் சோரம் போவாள்.

சமர்த்தனுக்கு ஏதும் பெரிது அல்ல.

சமர்த்தி என்ன பெற்றாள்? சட்டிச் சோறு தின்னப் பெற்றாள். 10365


சமர்த்தி என்ன பெற்றாள்? தலைச்சன் பெண் பெற்றாள்.

சமர்த்தில் குண்டு பாயுமா?

சமர்த்தில் வாழ்ந்தவர்களும் இல்லை; அசட்டில் கெட்டவரும் இல்லை.

சமர்த்து உள்ள சேவகனுக்குப் புல்லும் ஆயுதம்.

சமர்த்துக்கிட்டே பேசி ஜயிக்கலாம்; அசட்டுக்கிட்டே சண்டை போட்டாலும் முடியாது. 10370


சமர்த்துச் சனியன்.

(சமர்த்துக்குச் சனியன்.)

சமர்த்து சந்தியில் நிற்கிறது.

சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போகிறான்.

சமிக்ஞை அறியாதவன் சதுரன் அல்ல.

சமிக்ஞை காட்டிச் சண்டைக்கு அழைக்கிறான். 10375


சமுத்திர அலைகள் ஓயப் போகிறதும் இல்லை; தம்பி தலை முழுகித் தர்ப்பணம் பண்ணப் போகிறதும் இல்லை.

சமுத்திரத்தில் ஏற்றம் போட்டது போல் இருக்கிறது.

சமுத்திரத்தில் ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைத்தாற்போல.

சமுத்திரத்திலே பாய்கிற நதி வயலிலே பாயட்டுமே என்றாற் போல்.

சமுத்திரத்திலே பெருங்காயம் கரைத்தது போல. 10380


சமுத்திரத்துக்கும் சாண் துண்டுக்கும் எம்மாத்திரம்?

(குண்டுக்கும்.)

சமுத்திரத்து ஜலத்தை முட்டை கொண்டு அளந்தாளாம்.

சமுத்திரம் பொங்கினால் கிணறு கொள்ளுமா?

சமுத்திரமும் சாக்கடையும் சரியா?

சமுத்திர வன்கணன் சண்டாளன். 10385