பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தமிழ்ப் பழமொழிகள்


சரக்குக் கண்ட இடத்தில் பிள்ளைக்கு அமிழ்தம் கொடுக்க நினைக்கிறது போல. 10410

(மருந்து கொடுக்கிறது போல.)


சரக்குக் கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது போல.

சரக்கு மலிந்தால் கடைக்கு வரும்.

(சந்தைக்கு வரும்.)

சரத்தைப் பார்த்து பரத்தைப் பார்.

சரசம் மிஞ்சி ரவிக்கையில் கை போடக் கூடாது.

(ரவிக்கை மேலே.)

சரடு ஏறுகிறது கந்தைக்கு லாபம். 10415


சரப்பளி சந்திரஹாரம் தாங்க முடியவில்லை.

சரம் பார்த்தவனைச் சருகாதே; பட்சி பார்த்தவனைப் பகைக்காதே.

சரம் பார்ப்பான், பரம் பார்ப்பான்.

சரமாரியாய்ப் பொழிகிறான்.

சரி விற்கக் குழி மாறுகிறதா? 10420


சரீரப் பிரயாசை எதற்கு? சாண் வயிற்றுக்குத்தான். -

சருகு அரிக்க நேரம் இருந்ததன்றிக் குளிர் காய நேரம் இல்லை.

(தீக்காய.)

சருகு உதிர்ந்த மரம் போல.

சருகைக் கண்டு தழல் அஞ்சுமா?

சல்லடைக் கண் போலச் சில்லுச் சில்லாய்த் துளைக்கிறது. 10425


சல்லி கட்டின மாட்டுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?

சல்லி மோதக் கல்லி பறிக்கிறது.

சல்லிய சார்த்தியம்.

சல்லிவேர் அறக் கல்லி பறக்கிறது.

சலித்துக் கொடுத்த காரியம் சந்தோஷம் வந்தால் தீருமா? 10430


சலிப்போடு சம்பந்தி இழுத்தால் இலைப் பருக்கை.

(ஏழு இலை.)

சலுகை உள்ள மாடு படுகை எல்லாம் மேய்ந்ததாம்,

சவ்வாதில் மயிர் வாங்கினது போல.

சவத்துக்கு அழுவாரும் தம் துக்கம்.

சவலைப் பிள்ளை முலைக் குத்து அறியுமா? 10435