தமிழ்ப் பழமொழிகள்
213
சவுடால் பொடி மட்டை, தட்டிப் பார்த்தால் வெறு மட்டை
சவுண்டிக்குச் சாப்பிட்டவன் இருக்கச் செத்தது பொய்யா.
சளி பிடிக்காத மூக்கு இல்லை; சாராயம் குடிக்காத நாக்கு இல்லை.
சளி பிடித்ததோ. சனி பிடித்ததோ?
சளுக்கன் தனக்குக் சத்துரு; சவுரிக்காரனுக்கு மித்துரு. 10440
சற்குருவைப் பழித்தோர் சாய்ந்தே போவார்.
சற்சனர் உறவு சர்க்கரைப் பாகு.
சற்புத்திரன் இருக்கிற இடத்திலே தறிதலையும் இருக்கிறது.
சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே?
- (எங்கே வரும்?)
சன்னம் சன்னம் பர்வதம்.
சனத்தோடு சனம் சேரும்: சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.
சனப்பலம் இருந்தால் மனப் பலம் வரும்.
சனமருளோ, சாஸ்திர மருளோ?
சனி ஒழிந்தது; சங்கடம் தீர்ந்தது.
சனிக்கிழமையும் புதன் கிழமையும் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பான். 10450
- (செட்டிநாட்டு வழக்கு; வேறு ஒன்றும் செய்வதில்லை என்பது கருத்து.)
சனி நீராடு.
சனிப்பயிர் சாத்திரத்துக்கு உதவும்.
சனிப் பிணம் தனிப் போகாது.
சனிப் பிணம் துணை தேடும்.
- (துணை கூட்டும்.)
சனிப் பெருக்கு. 10455
- (வேளாண்மைக்கு நல்லது.)
சனி பிடித்த நாரை கெளிற்றைப் பிடித்து விழுங்கினாற் போல.
சனியன் தொலைந்தது.
சனியன் பிடித்தவள் சந்தைக்குப் போனாலும் புருஷன் அகப்படமாட்டான்.
சனியன் பிடித்தவனுக்குச் சந்தையிலும் கந்தை அகப்படாது.
- (பிடித்தவளுக்கு.)
சனியனை அடிமடியில் கட்டியது போல. 10460
சனியனை விலைக்கு வாங்கினது போல.
சனியும் புதனும் தங்கும் வழி போகக் கூடாது.
சனியும் புதனும் தன்னை விட்டுப் போகாது.
சனியைப் போலக் கொடுப்பவனும் இல்லை: சனியைப்போலக் கெடுப்பவனும் இல்லை.
சஜ்ஜனர் உறவு சர்க்கரைப் பாகுபோல. 10465