தமிழ்ப் பழமொழிகள்
215
சாகாத் தலை, வேகாக் கால்.
சாகாப் பேருக்கு ஆகாரம் ஏன்? 10490
சாகாமல் கற்பதே கல்வி; பிறரிடத்தில் ஏகாமல் உண்பதே ஊண்.
சாகாய வாஸ்யாத், லவணாய வாஸ்யாத்.
சாகிற காலத்தில் சங்கரா. சங்கரா என்கிறது போல.
சாகிறது போல் இருந்து வியாதி தீருகிறதும் உண்டு.
சாகிற நாய் வீரத்தைக் காட்டினாற் போல. 10495
- (வீட்டின் மேல் ஏறினாற் போல)
சாகிற நாளைக்கு வாதம் பலித்ததாம்.
- (சாகிற வயதில். வாதம்.ரஸவாதம்.)
சாகிற பேருக்குச் சமுத்திரம் கால்வாய்.
சாகிற வரைக்கும் சங்கடம் ஆனால் வாழ்கிறது எக்காலம்?
சாகிறவரைக்கும் சங்கடம் என்றால் சந்தோஷம் எக்காலம்?
சாகிற வரைக்கும் சஞ்சலம் போனால் போகிறது எக்காலம்? 10500
சாகிற வரைக்கும் பட்டினி இரு என்றால் ஒரு நாளாவது பட்டினி இருக்கும் நிலை வரும்.
சாகிற வரையில் கஷ்டம் ஆனால் சுகம் எப்போது?
சாகிற வரையில் மருந்து கொடுக்க வேண்டும்.
சாகிற வரையில் வைத்தியன் விடான்; செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
சாகிற வரையில் துன்பம் ஆனால் சுகம் எப்போது? 10505
சாகிறவன் சனியனுக்குப் பயப்படுவானா?
- (அஞ்சுவானா?)
சாகிறவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டும்.
சாகிறவனைப்போல் இருப்பான் பிழைப்பான்; பிழைப்பானைப் போல் இருப்பான் சாவான்.
சாகிறேன், சாகிறேன் என்ற பெண்ணும் போகிறேன், போகிறேன் என்ற புருஷனும் போல் மிரட்டாதே.
சாகுந்தனையும் சங்கடம் ஆனால் வாழ்கிறது எப்போது? 10510
சாகும்போது வாணியனிடம் அகப்பட்டுக் கொண்டது போல.
சாகையிலே வந்தால் பாடையிலே பார்க்கலாம்.