பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தமிழ்ப் பழமொழிகள்


கண்ணாலேயும் கண்டதில்லை. காதாலேயும் கேட்டதில்லை. கண்ணான பேர்களை மண் ஆக்குகிறான். கண்ணான பேரை எல்லாம் புண் ஆக்கிக் கொண்டு, கரும்பான

   பேரை எல்லாம் வேம்பாக்கிக் கொண்டான். 

6745


கண்ணான மனசைப் புண் ஆக்குகிறான். கண்ணுக்கு ஆனால் புண்ணுக்கு ஆகாது. கண்ணுக்கு இமை காதமா?

(புருவம் காதமா?)

கண்ணுக்கு இமை; பெண்ணுக்கு நாணம். கண்ணுக்கு என்ன கரிப்பு? 6750


கண்ணுக்குக் கண் அருகே காணலாம். கண்ணுக்குக் கண்ணாய் இருந்தும் கடைப் பெண்ணுக்கு வழி பார்க்கிறதா?

(பார்க்கிறான்.)

கண்ணுக்குக் கலம் தண்ணீர் விடுகிறது. கண்ணுக்குப் புண்ணும் அல்ல; காண்பார்க்கு நோவும் அல்ல.

(நோயும்.)

கண்ணுக்கு மூக்குக் காத தூரம் இல்லை. 6755

கண்ணுக்கும் மூக்குக்கும் காலம் இப்படி வந்ததே! கண்ணுக்கும் மூக்குக்கும் நேராகப் பார். கண்ணுக்குள் சம்மணம் கொட்டுவான்; கம்பத்தில் ஐந்தானை கட்டுவான். கண்ணும் கருத்தும் உள்ள போது இல்லாமல், கண் பஞ்சு அடைந்த பின் என்ன கிடைக்கும்?

(கிடைக்காத போது.)

கண்ணும் கலத் தண்ணீர் விடும். 6760

கண்ணும் கருத்தும் உள்ள போதே காணோம்; அவை போனபின் என்ன கிடைக்கும்? கண்ணும் நமது; விரலும் நமது: கண்ணைக் குத்துவதா? கண்ணும் புண்ணும் உண்ணத் தீரும்.