52
தமிழ்ப் பழமொழிகள்
கணவனுக்கு மிஞ்சின கடவுள் இல்லை; கடலுக்கு மிஞ்சின ஆழம் இல்லை.
கணவனைப் பிரிந்து அயல் வீட்டில் இருக்கிறதா?
கணவனை வைத்துக் கொண்டு அல்லவோ கள்ள மாப்பிள்ளையைக் கொள்ள வேண்டும்? 6830
கணிகாலங்காரம் போல.
- (கணிகா - தேவடியாள்.)
கணிசத்துக்கு இவள்; காரியத்துக்கு அவள்.
கணுக் கணுவாகக் கரும்பானாலும் ஆனைக்கு என்னவோ கடைவாய்க்குத்தான்.
கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள்.
கணை முற்றினால் கட்டையிலே. 6835
கணையாழி கண்டான் ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி.
- (கணையாழி கண்டான்-ஓருர்.)
கத்தரிக்காய் என்று சொன்னால் பத்தியம் முறிந்து போகுமா?
கத்தரிக்காய்க்குக் காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.
கத்தரிக்காய்க்குக் கால் முளைத்தால் கடைத்தெருவுக்கு வந்தால் தெரிகிறது.
கத்தரிக்காய்க்குக் கையும் காலும் முளைத்தாற் போல். 6840
கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள் மணை குற்றம் என்கிறாள்
- (குற்றமா?)
கத்தரிக்காய் நறுக்குகிற கையும் காலும் பார்த்தால் பூசணிக்காய் வழி போகாதே, போகாதே என்கிறதாம்.
கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுரா?
கத்தரிக்காய் விதை சுரைக்காயாய் முளைக்காது.
கத்தரிக்காய்க்குக் காலும் தலையும் முளைத்தது போல். 6845
கத்தரிக்காய் விற்ற பெட்டி காசுப் பெட்டி; வெள்ளரிக்காய் விற்ற பெட்டி வெறும் பெட்டி.
கத்தரிக்காயை நறுக்கிக் காலும் கையும் வெட்டிக் கொண்ட பெண்ணே, நீ பூசணிக்காய்ப் பக்கம் போகாதே.
கத்தரிக் கொல்லையிலே கூத்து வேடிக்கை பார்த்தது போல.