தமிழ்ப் பழமொழிகள்
55
கந்தன் களவுக் கல்யாணத்துக்குக் கணபதி சாட்சி.
கந்தனுக்குப் புத்தி கவட்டிலே. 6895
கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு; கூழ் ஆனாலும் குளித்துக் குடி
கந்தை உடுத்துக் கடைவீதி போனாலும் கண்ணாடி கண்ணாடியே.
கந்தைக்கு ஏற்ற பொந்தை; கழுவுக்கு ஏற்ற கோமுட்டி:
- (தகுந்த )
கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.
- (சரடு ஒட்டுகிறது.)
கந்தைத் துணி கண்டால் களிப்பாள்; எண்ணெய்த் தலை கண்டால் எரிவாள். 6900
கந்தைத் துணியும் கரி வேஷமும் ஆனான்.
- (கரிக் கோலமும்.)
கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும்.
கந்தையை அவிழ்த்தால் சிந்தை கலங்கும்.
கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி; வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி.
கப்பரையிலே கல் விழுகிறது. 6905
- (இடுவார் உண்டோ?)
கப்பல் அடிப்பாரத்துக்குக் கடற்கரை மண்ணுக்குத் தாவு கெட்டாற் போல.
கப்பல் உடைந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
- (கவிழ்ந்தாலும்.)
கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல.
கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுப் போகுமா?
- (ஓடிப்பட்ட.)
கப்பல் ஏறிய காகம் போலக் கலங்குகிறது. 6910
கப்பல் ஏறிவிட்ட காகம் கலங்குமா?
கப்பல் ஒட்டிய வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
கப்பல் போம்; துறை கிடக்கும்.
- (நிற்கும்.)