பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

59

 கர்த்தாவைக் குருடன் வேண்டுவது கண் பெறத்தானே?

கர்ப்பத்துக்குச் சுகம் உண்டானால் சிசுவுக்குச் சுகம்.

கர்ப்பிணியின் பேரில் துர்ப்பலம்.

கர்ப்பூர மலையில் ஆக்நேயாஸ்திரம் பிரயோகித்தது போல.

கர்மத்தினாலே வந்தது தர்மத்தினாலே போக வேண்டும். 6985

(தொலைக்க.)

கர்மம் முந்தியா? ஜன்மம் முந்தியா?

கர்விக்கு மானம் இல்லை; கோபிக்குப் பாபம் இல்லை.

கரகத்துத் தண்ணீர் காத வழி.

கரகத்து நீர் காதம் காக்கும்.

(கரகத்துக்கு நீர் காகம் காக்கும்.)

கரட்டுக் காட்டுக்கு முரட்டு மண் வெட்டி, 6990

கரடிக்கு உடம்பெல்லாம் மயிர்.

கரடிக்குப் பயந்து ஆனையிடம் தஞ்சம் புகுந்தாற் போல.

கரடிக்குப் பிடித்த இடம் எல்லாம் மயிர்.

கரடி கையில் அகப்பட்டவனுக்கு கம்பளிக்காரனைக் கண்டாலும் பயம்.

(உதை பட்டவனுக்கு.)

கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக இடம் இராது. 6995

(வழி இராது, இருக்குமா?)

கரடி பிறையைக் கண்டது போல.

கரடியைக் கைவிட்டாலும் கரடி கையை விடவில்லை.

கரண்டி ஆபீஸ்காரனுக்குக் காதிலே கடுக்கன் என்ன?

கரண்டி பிடித்த கையும் கன்னக்கோல் பிடித்த கையும் சும்மா இருக்குமா?

கரணம் தப்பினால் மரணம். 7000

(கரணம்.திருமணம்.)

கரதலாமலகம் போல் காண்கிறது.

கரம் கொண்டவன் அறம் வழுவலாகாது.

கரம் பற்றிய கன்னியைக் கதற அடிக்கக் கூடாது.

கரம் மாறிக் கட்டினால் கனம் குறையாது.

கரிக்காலி முகத்தில் விழித்தால் கஞ்சியும் கிடையாது. 7005