68
தமிழ்ப் பழமொழிகள்
கல்லைப் பிளக்கக் காணத்தை விதை.
- (பிளந்து.)
கல்லைப்போல் அகமுடையான் இருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்? 7185
கல்லைப் போலக் கணவன் இருக்க நெற்சோற்றுக்கு அழுவானேன்?
கல்லைப் போலப் பெண்டாட்டி இருக்கக் கடப்பை அரிசிச் சோற்றுக்கு நிற்பானேன்?
கல்லோடு இடறினாலும் கணக்கனோடு இடறாதே.
- (முரணினாலும்.)
கல் வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூட வேண்டும்.
கல்வி அழகே அழகு. 7190
- (நாலடியார்.)
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
- (அழகி. கடுகளவும்பிரகாசிக்கா.)
கல்வி உள்ள வாலிபன் கன கிழவனே.
- (கற்றவன் கன கிழவன்.)
கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழை வேண்டும்.
கல்வி ஒன்றே அழியாச் செல்வம்.
கல்விக்காரப் பெண்ணாள் களைவெட்டப் போனாள்;களைக்கொட்டு இல்லையென்று மெனக்கெட்டுப் போச்சு. 7195
கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்.
கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
கல்வி கரை இல; கற்பவர் நாட் சில.
- (நாலடியார்.)
கல்வி கற்கிறதைவிடக் கருத்தை ஆராய்கிறது நன்மை.
- (தன் கருத்தை.)
கல்வி கற்றும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறது. 7200
- (விடுவது போல.)
கல் விதைத்து நெல் அறுத்தவர் யார்?
கல்வியிற் பெரியவன் கம்பன்.
கல்வியும் குலமும் வெல்வது வினவின்.
கல் விழுந்தாலும் விழும்; காய் விழுந்தாலும் விழும்.