தமிழ்ப் பழமொழிகள்
83
கற்பித்தவனுக்குக் காக்க வல்லமை இல்லையா?
கற்பு இல்லா அழகு வாசனை இல்லாப் பூ.
கற்பு எனப்படுவது சொல் தவறாமை.
- (திறம்பாமை.)
கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது?
கற்றது எல்லாம் வித்தை அல்ல; பெற்றது எல்லாம் பிள்ளை அல்ல. நட்டது எல்லாம் பயிர் அல்ல. 7520
- (மரம் அல்ல.)
கற்றது கடுகளவு: கல்லாதது கடல் அளவு.
- (கற்றது கை அளவு.)
கற்றது கை மண் அளவு: கல்லாதது உலகளவு.
கற்றது சொல்வான்; மற்று என்ன செய்வான்?
கற்றதைக் காய்ச்சியா குடிக்கப் போகிறாய்?
- (பார்க்கிறாய்)
கற்றலிற் கேட்டலே நன்று. 7525
- (பழமொழி தானுாறு.)
கற்றவர் கோபம் நீர்ப்பிளவு போல் மாறும்.
கற்றவன் உண்பான்; பெற்றவளும் உண்பாள்.
கற்றவனிடத்திலா வித்தையைக் காட்டுவது?
கற்றவனுக்கு எந்த வித்தையும் கால் நாழிகையில் வரும்.
- (கற்றவனுக்கு வித்தை கால் நாழிகை.)
கற்றவனுக்கு மயிர் அத்தனை: கல்லாதவனுக்கு மலை அத்தனை. 7530
கற்றவனும் உண்பான்; பெற்றவனும் உண்பான்.
- (பெற்றவளும்.)
கற்ற வித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன் போல.
கற்ற வித்தையைப் பெற்ற தாயிடம் காட்டுவதா?
- (காட்டாதே.)
கற்றறி மூடன்.
- (மோழை)