பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கா

காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தாயோ புன்னை?

கண்ணாளன் வரும் வரையில் பொறுக்கவில்லையே புன்னை? 7685


காக்கனும் பூக்கனும் சேர்ந்து ராக்கன் வீட்டு நெல்லுக்கு வினை வைத்தார்கள்.

காக்கை இருந்த கொம்பு அசையாது.

காக்கை ஏறப் பனம்பழம் விழுந்தது போல.

(காகதாளிக நியாயம்.)

காக்கை ஏறின கொம்பு அசையாதா?

காக்கைக் கழுத்தில் சீட்டுக் கட்டினது போல. 7690


காக்கைக்கு இருட்டில் கண் தெரியாது.

காக்கைக்கு ஐந்து குணம்.

காக்கைக்கு ஒரு கீர்த்தி, நரிக்கு ஒர் அபகீர்த்தி.

காக்கைக்குக் கொண்டாட்டம்; எருதுக்குத் திண்டாட்டம்.

காக்கைக் குஞ்சையும் கணக்கன் குஞ்சையும் கண்ட இடத்தில் குத்தவேண்டும். 7695


காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.

காக்கைக்குப் பயந்திருப்பாள்; கழுகுக்குத் துணிந்திருப்பாள்.

காக்கைக்குப் பயந்து அழுவாள்; கழுகுக்குத் துணிந்து எழுவாள்.

காக்கைக்கு புடுக்கு உண்டானால் பறக்கிற போது தெரியாதா?

காக்கைக்குப் போடு என்றால் நாய்க்குப் போட்டாற் போல. 7700


காக்கைக்கும் காக்கையிலும் கன சிறப்பு.

காக்கைக் கூட்டம் போலக் கட்டுக் கோப்பு.