பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தமிழ்ப் பழமொழிகள்

 காக்கைக் கூட்டில் குயிற் குஞ்சு வளர்வது போல.

காக்கை கண்ணுக்குப் பீர்க்கம் பூப்பொன் நிறம்.

காக்கை கதறப் பயந்து கணவனைக் கட்டிக் கொண்டாளாம். 7705


காக்கை கர் என்றதாம்; அகமுடையானை இறுகக் கட்டிக்கொண்டாளாம்.

(அப்பா என்று போய்க் கட்டிக் கொண்டாளாம்.)

காக்கை கரிச் சட்டியைப் பழித்ததாம்.

காக்கை கரைந்தால் ஆரோ வருவார்.

காக்கை கரைந்து உண்ணும்.

காக்கை குசுவினாற் போல் இருக்கிறது. 7710


காக்கை குருவி மூக்காலே கொரிக்கிறது போல,

காக்கை குளிக்கிறது போல.

காக்கை நோக்கு அறியும்; கொக்கு உப்பு அறியும்.

காக்கை பிடிக்கி போல் இருக்கிறான்.

காக்கை பிடிக்கிறவருக்குக் காலம். 7715

(கால் கை பிடிக்கிறவருக்கு.)


காக்கை பிடிக்கிறவனை நம்பாதே, காக்கை பிடித்தல்.

(கால் கை பிடித்தல்.)

காக்கை மிளகாய்ப்பழம் கொத்தினாற் போல்.

காக்கை மூக்கு நிழலிலே கண்டாலும் கம்மாளன் கண்ணிலே எழுபது கோடி பசும் பொன் படும்.

காக்கையிற் கரிது களம் பழம். 7720


காக்கையின் கண்ணுக்குப் பீர்க்கம்பூப் பொன் நிறம்.

காக்கையின் கழுத்தில் பனம்பழம் கட்டினது போல.

(பனங்காயை)

காக்கையினும் கன சிவப்பு.

காக்கையும் கத்திப் போகிறது; கருவாடும் உலர்ந்து போகிறது.