பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

93

 காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும். 7725


காக்கையும் குயிற்குஞ்சைத் தன் குஞ்சு போல் வளர்க்கும்.

(காக்கும்.)

காக்கையைக் கண்டு அஞ்சுவான்; கரடியைப் பிடித்துக் கட்டுவான்.

(அஞ்சுவான்.)

காக்கையைக் கண்டு அஞ்சுவான்; காவேரி ஆற்றை நீந்துவான்.

காக்கையைக் கண்டு பயப்படுவான்; கள்ளன் கூடப் புறப்படுவான்.

காக்கையை விடக் கரியது களாப்பழம். 7730


காக்கை விரும்பும் கனி வேம்பு.

காகத்திலே வெள்ளை உண்டா?

காகத்தின் கழுத்துக் கறுத்தென்ன? வெளுத்தென்ன?

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல.

காகம் இல்லாத ஊர் சோனகன் இல்லாத ஊர். 7735

(சோனகன்-முகம்மதியன்.)


காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்.

(பாவம் இல்லாத ஊர்.)

காகம் உட்கார்ந்த கிளை ஆடாமல் இருக்குமா?

(ஆடாமலா?)

காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?

(பனம்பழம் விழுமா?)

காசா லேசா?

காசி இரண்டு எழுத்துத்தான்;காண எத்தனை நாள் செல்லும்? 7740


காசிக்குத் திருவையாறு அதிகம்.

காசிக்குப் போய்த் தயிர் கொண்டு வந்ததைப் போல்.

காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை.

காசிக்குப் போயும் மூடத் தவசி காலில் விழுகிறதா?

காசிக்குப் போன கடா மாடு போல. 7745

(அங்கும் உழுவான்.)


காசிக்குப் போனால் கால் ஆட்டலாம்; கால் ஆட்டக் கால் ஆட்டத் தோள் ஆட்டலாம்.