பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தமிழ்ப் பழமொழிகள்

 காசைப் பார்த்தால் ஆசையாய் இருக்கிறது; கண்ணைப் பார்த்தால் போதையாய் இருக்கிறது.

காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக் கொண்டதுபோல். 7795


காஞ்சிக்குப் போனாலும் மஞ்சத்தின் கால் நான்கு.

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி. காசி விசாலாட்சி.

காஞ்சிரங் கனி கடுஞ்சிவப்பாய் இருந்தால் கடிதாக உயிர் மாய்க்கும்.

(மாய்க்க.)

காஞ்சீபுரத்து உபசாரம்.

காஞ்சீபுரத்துக்குப் போனால் காலை ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம். 7800

(நெசவு செய்து. தின்னலாம், பிழைக்கலாம்.)


காஞ்சீபுரம் குடை அழகு.

காஞ்சீபுரம் குடை, திருப்பதி வடை, சீரங்கத்து நடை.

காட்சிகள் காணக் கண்ணுக்கு அலுப்பா?

காட்டக் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு குமர கண்ட வலிப்பு வருகிறது.

காட்ட முடியுமே தவிர ஊட்ட முடியுமா? 7805

காட்டாளுக்கு ஒரு நீட்டாள்; நீட்டாளுக்கு ஒரு முடக்கான்; முடக்காளுக்கு ஒரு நொண்டிக் குதிரை.

(செங்கற்பட்டு வழக்கு.)


காட்டாளுக்கு ஒரு மோட்டாள்; மோட்டாளுக்கு ஒரு மொண்டி ஆள்.

(ஒரு துடைப்பைக் கட்டை)

காட்டாற்றுச் சரசாப்புக் காட்டானைக்குப் பரபரப்பா?

காட்டாற்று வெள்ளம் போல.

காட்டான் மோட்டான் சண்டைக்கு இளைச்சான். 7810


காட்டானை உண்ட கனி போல் இருக்கும், தேட்டாளன் திரவியம்.

காட்டானை தின்ற கனிபோலே.

காட்டானைக்கு வீட்டு ஆனையைக் கண்டால் இளப்பம்.

காட்டானை கனவில் நாட்டுச் சிங்கம் வந்தது போல.

காட்டானையைக் காட்டி வீட்டுப் பெண்ணைத் தள்ளுகிறது. 7815