பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தமிழ்ப் பழமொழிகள்


தொம்பைக் கூண்டிலே எலியைக் காவல் வைத்துக் கட்டினது போல,

தொழில் இல்லாதவன் தோட்டம் செய்.

தொழிலை விட்டவன் முகடி தொட்டவன். 13405


தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்.

(குறள்.)

தொழுதாலங்குடிக்குப் பொழுதும் போகவேணுமா?

(தொழுதாலங்குடி - மாயூரத்திற்கு அருகிலே உள்ளதோரூர், பகலிலே திருட்டுப் பயம்.)

தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.

தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமல் போகுமா?

தொழுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில். 13410


தொழுவார்க்கு ஒரு கோயிலும் உழுவார்க்கு ஒரு நிலமும் கிடையாவா?

தொன்மை நாடி நன்மை நாடாதே.

தொன்மை மறவேல்.

தொன்னிலம் முழுதும் தோன்றியது கல்வி.