பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

105



நகைத்து இகழ்வோனை நாய் என நினை.

நகை போட்டதும் இல்லை; போட்டவர்களைப் பார்த்ததும் இல்லை. 13495


நங்கும் நாளமும்.

நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல.

நச்சுப் பேச்சு நாளும் தரித்திரம்.

நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா?

நச்சுமரம் ஆனாலும் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். 13500


நச்சுமரம் ஆனாலும் வைத்தவன் மரம்.

(வச்சவன்.)

நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் குடியிருந்தாற்போல.

நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் பெண் கொடுத்தது போல.

(பெண் கொண்டது போல.)

நசை கொன்றான் செல் உலகம் இல்.

(பழமொழி நானூறு.)

நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி, குப்பையில் இருந்தாலும் கோமேதகம். 13505


நஞ்சு நாற்கலம் வேண்டுமா?

நட்ட அன்றும் சாவி; அறுத்த அன்றும் பட்டினி.

நட்ட அன்று மழையும், கெட்ட அன்று விருந்தும் கேடு.

(இழவும் கேடு.)

நட்ட குழி நாற்பது நாள் காக்கும்.

நட்டது எல்லாம் மரம் ஆமா? பெற்றது எல்லாம் பிள்ளை ஆமா? 13510


நட்ட நடுவில் முழம் ஆனேன்; நடவு திரும்பிச் சாண் ஆனேன்; தட்டான் இட்ட வேளாண்மை தானாய்ப் பொன்னிறம் ஆச்சுது.

நட்டாலும் தில்லை நாயகம் நடவேண்டும்.

நட்டாற்றில் கைவிட்டாற் போல.

நட்டாற்றுக் கோரையைப் போல.

நட்டு அறான் ஆதலே நன்று. 13515


நட்டு ஆயினும், பட்டு ஆயினும்.

(பனை.)

நட்டுக் காய்ந்தால் நாழி நெல் காணாது.

நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா?

(நொட்டி)