பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

107



நடபடி உண்டானால் மிதியடி பொன்னாலே.

நடலப் புடலங்காய் காய்க்கிறதாம்! நாழிக்குப் பத்தெட்டு விற்கிறாளாம். 13545

(காய்த்ததாம், விற்கிறதாம்.)


நடவாத காரியத்தில் பிடிவாதம் பிடிக்கிறது.

நடவில் சிரிப்பு; அறுவடையில் நெருப்பு.

நடவுக்குத் தெளி, நாலத் தொன்று.

(நாலில் ஒன்று.)

நடவு நட்டாலும் நாற்று மீந்தாலும் நான் நடக்கிற நடை இதுதான் என்று சொல்லுமாம் கடா.

நடு உழவிலே நத்தை தெறித்தது போல. 13550


நடு ஊரிலே நச்சுமரம் பழுத்து என்ன?

(பழுத்தாற் போல, பழுக்கலாமா?)

நடுக்கடல் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர்.

(வடுப்படாமல்.)

நடுக்கடலில் விழுந்து அலைகிறவனுக்கு ஒரு தெப்பம் அகப்பட்டதைப் போல.

நடுக்கத் தட்டானுக்குக் கல்யாணம்; நாற்பத்தெட்டாந் தேதி.

(இருபத் தெட்டாந்தேதி.)

நடுக்காட்டில் போனாலும் வடுப்படாமல் வருவார். 13555


நடுங்க அடித்துப் பிடுங்குகிறதா?

நடுச் சமுத்திரத்திலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.

நடுச் செவியில் நாராசம் காய்ச்சி விட்டாற்போல.

நடுத்தரம் ஆனவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்ற வைத்தால் மாறும்.

நடுத் தெரு நாராயணன். 13560


நடுத்தெருப் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?

நடுப்படையில் போனாலும் வடுப்படாமல் வருவான்.

(வருகிறது.)

நடுப்புடைவையில் கோவணம் கிழிக்கிற மாதிரி.

நடு மேட்டில் நரி கத்திற்றாம், தீர்த்த முடக்கில் தேள் கொட்டிற்றாம்.

நடைக்கு அஞ்சிச் சிற்றப்பன் வீட்டில் பெண் கொண்டானாம். 13565


நடைக்குச் சோம்பற்பட்டுச் சிற்றப்பன் வீட்டில் வாழ்க்கைப் பட்டாளாம்.