பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தமிழ்ப் பழமொழிகள்

9


செத்த பிணத்தைச் சுற்றித் திரிந்தாற் போல.

செத்த பிறகே செய்தவனுக்குச் செய்கிறது? 11310

(செத்தவனுக்கு.)


செத்த பிறகா செல்வம் அநுபவிக்கிறது?

செத்தபின் எப்படிப் போனால் என்ன?

செத்தபின் வீட்டில் கெட்டவன் யார்?

செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்தரிக்காயை அறுக்கும்.

செத்த மாடு புல் தின்னுமா? 11315


செத்தவன் இருக்கச் சவுண்டி சாப்பிட்டது நிஜம் என்பது போல்.

செத்தவன் உடலம் சுமந்தவன் கண்மேலே.

செத்தவன் உடைமை இருந்தவனுக்குக் கிடைக்கும்.

(இருந்தவன் சொத்து. )

செத்தவன் கண் கடாக்கண்; இருந்தவன் கண் இல்லிக்கண்.

செத்தவன் கண் செந்தாமரைக் கண்; இருக்கிறவன் கண் நொள்ளைக் கண். 11320


செத்தவன் கண் பெரிய கண்.

செத்தவன் காதில் சுக்கு வைத்து ஊதினாற் போல.

செத்தவன் கையில் வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம்.

(வெறும் பாக்குக் கொடுத்தது போல.)

செத்தவன் சாட்சிக்கு வருவது இல்லை.

செத்தவன் செந்தாமரைக் கண்ணன். 11325


செத்தவன் தலை கிழக்கே இருந்தால் என்ன? மேற்கே இருந்தால் என்ன?

செத்தவன் தலையில் எத்தனை வண்டி ஏறினால் என்ன?

செத்தவன் நான் இருக்கச் சவுண்டி சாப்பிட்டவன் நான் என்றானாம்.

செத்தவன் பாரம் சுமந்தவன் தலையில்.

செத்தவன் பிழைத்தால் வெற்றி கொள்கிறது ஆர்? 11330


செத்தவன் பிட்டத்தில் நெய் எடுத்துத் திருவண்ணாமலைக்கு விளக்கு ஏற்று.

செத்தவன் பிட்டம் தெற்கே கிடந்தால் என்ன? வடக்கே கிடந்தால் என்ன?

(கிழக்கே இருந்தால் என்ன? மேற்கே இருந்தால் என்ன?)

செத்தவன் பிள்ளை இருககிறவனுக்கு அடைக்கலம்.