பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

109



நத்துக்கும் சுழி, முத்துக்கும் சுழி, குன்றிமணிக்கும் பிட்டத்திலே சுழி.

நத்துப் புல்லாக்கு நாணயம் பார்க்கிறது; இரட்டைக் குண்டு அட்டிகை எட்டி எட்டிப் பார்க்கிறது.

நத்தையின் வயிற்றில் முத்துப் பிறந்தது போல.

நதி எல்லாம் பால் ஆனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.

நதி மூலத்தையும் ரிஷி மூலத்தையும் விசாரிக்கக் கூடாது. 13600


நந்தன் தோல் காசு வழங்கினாற் போல.

நந்தன் படைத்த பண்டம் நாய் பாதி, பேய் பாதி.

(நாய்வந்தி ஆவாரி.)

நந்தன் படை வீடா?

நந்தோ ராஜா பவிஷ்யதி.

நபும்சகன் கையில் ரம்பை அகப்பட்டது போல. 13605


நம் நிழல் நம்மோடே.

நம்ப நட, நம்பி நடவாதே.

(யாழ்ப்பாண வழக்கு.)

நம்பமாட்டாதவன் பெண்சாதிக்கு நாற்பது பேர் மாப்பிள்ளைமார்.

நம்பவைத்து கழுத்து அறுக்கலாமா?

நம்பியான் விட்டதே தீர்த்தம். 13610


(வார்த்ததே.)

நம்பின பேருக்கு நடராஜா, நம்பாத பேருக்கு யமராஜா.

நம்பினவரை உண்மையில் காத்தான்.

நம்பினவரைக் காட்டில் விடலாமா?

நம்பினவரை நட்டாற்றில் விடலாமா?

(நம்பின பேரைக் கைவிடுவதா?)

நம்பினால் தெய்வம்; நம்பாவிட்டால் கல். 13615


நம்பூதிரி சொத்தை எழுதி வைத்த மாதிரி.

(நிறையச் சாப்பிட்ட சந்தோஷத்தில் இனி எதற்கு என்று எழுதிவைத்து விட்டானாம். பாலைக்காட்டு வழக்கு.)

நம்பூதிரி வெற்றிலை போட்டுக் கொண்ட மாதிரி.

(புதிய வெற்றிலையைக் கண்டு அருமை பாராட்டி உண்ண மனம் இன்றிப் பழைய வெற்றிலையைப் போட்டுக் கொள்வான்.)

நம்மாழ்வார் நம்மைக் கெடுத்தார்; கூரத்தாழ்வார் குடியைக் கெடுத்தார்.

நம்மைச் செருப்பால் அடித்தாலும் நம் அண்ணன் வீட்டுப் பயலை வாடா, போடா என்னலாமா?