பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

113



நல்லதுக்கா நாய்மேல் சன்னதம் வந்தது?

நல்லதுக்கா வந்திருக்கிறது, நாய்மேல் சங்கராந்தி?

நல்லதுக்கு ஒரு பொல்லாதது; பொல்லாததுக்கு ஒரு நல்லது.

நல்லதுக்கு நாலு இடையூறு வரும்.

நல்லது கண்டால் இறைவனுக்கு என்பார் நல்லோர். 13705


நல்லது கண்டால் நாயகனுக்கு நல்குவார்.

நல்லது கெட்டது நாலுபேர் சொல்வார்கள்.

நல்லது கெட்டால் நாய்க்கும் கடை.

(வழங்காது.)

நல்லது செய்கிறவன் பெண்சாதியை நாய்க்குப் பிடித்துக் கட்டு.

நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாதது போகிற வழியே போகிறது. 13710


நல்லது செய்வதில் நாலு இடையூறு வரும்.

நல்லது சொல்ல நாட்டுக்கு ஆகாது.

நல்லது சொல்ல நாடும் இல்லை; உற்றது சொல்ல ஊரும் இல்லை.

நல்லது சொல்லிக் கெட்டார் இல்லை.

நல்லது சொல்லி நடுவழியே போனாலும் பொல்லாதது போகிற வழியே போகும். 13715


நல்லது தெரியுமா நாய்க்கு?

நல்லது நாற்கலம்; ஊத்தை ஒன்பது கலம்.

நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் தெரியும்.

நல்ல தேசத்துக்கு நாலு செம்பு.

நல்ல நாய் ஆனாலும் நரகலை நாடித்தானே செல்லும் 13720


நல்ல நாய்ச்சியார் கடைந்த மோர் நாழி முத்துக்கு நாழி மோர்.

நல்ல நாயைக் கிள்ளியா பார்க்க வேணும்?

நல்ல நாளில் நாழிப்பால் கறக்காது; அதிலும் கன்று செத்த கசுமாலம்.

நல்ல நாளில் நாழிப்பால் கறவாதது, கன்று செத்துக்கப்பால் கறக்குமா?

(கன்று செத்தால் கேட்க வேண்டுமா?)

நல்ல நாளில் நாழிப்பால் கறவாத மாடா ஆகாத நாளிலே அரைப்படி கறக்கும்? 13725