பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தமிழ்ப் பழமொழிகள்




நல்ல நாளிலே நாழிப் பால் கறவாதது, கோடை நாளிலே குறுணி கறக்குமா?

நல்ல நினைவை அநுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல்.

நல்ல பாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியது போல.

நல்ல பாம்பை ஆட்டுகிற பிடாரன் நாகப்பூச்சியைக் கண்டு பயப்படுவானா?

நல்ல பிராணன் நாற்பது நாள். 13730


நல்ல பெண்டுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஓர் அடி.

நல்ல மரத்தில் நச்சுக்கனி பழுக்காது.

நல்ல மரத்தில் நரையான் விழுந்த மாதிரி.

நல்ல மரத்தில் நல்ல பாம்பு குடியிருந்தாற் போல.

நல்ல மரத்தில் புல்லுருவி முளைத்தது போல. 13735

(புல்லுருவி பாய்ந்தாற் போல்.)


நல்ல மரம் நச்சுக் கனியைத் தராது; நச்சு மரத்திலே நல்ல கனியும் வராது.

நல்ல மனைவி நல்லதைக் கண்டால் நமது புருஷனுக்கு என்பாள்.

(என்று எடுத்து வைப்பாள்.)

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

(பெண்ணுக்கு.)

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; பட்டி மாட்டுக்குப் பத்துச் சூடு.

நல்ல மாட்டுக்கு ஓர் அடி; நல்ல மனுஷர்களுக்கு ஒரு சொல். 13740


நல்ல மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா?

நல்லவர் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்.

நல்லவர் கண்ணில் நாகம் பட்டாலும் கொல்லார்

(கண்ணில் பட்ட நாகமும் சாகாது. அகப்பட்ட நாகமும்.)

நல்லவர்களுக்குச் சொல்லாமல் சாவு வரும்.

நல்லவர் கெட்டால் நாயும் சீந்தாது. 13745


நல்லவர் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர் போல உதவும்.

நல்லவரிடத்தில் நல்ல பாம்பும் சேரும்.

நல்லவரிடத்தில் நன்மை விளங்கும்.

நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்க வேண்டும்; கெட்டவன் உறவைப் பத்துப் பணம் கொடுத்து நீக்க வேண்டும்.

நல்லவன் என்று பெயர் எடுக்க நாள் செல்லும். 13750