பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தமிழ்ப் பழமொழிகள்



நாட்டில் பஞ்சாங்கம் போனால் நட்சத்திரமும் போச்சோ?

நாட்டிலே விளைந்தால் நன்னாரி; மலையிலே விளைந்தால் மாகாளி.

நாட்டுக் கலப்பையால் நாலு முறை உழு.

நாட்டுக்கு அடுத்தது கொங்கராயனுக்கு. 13885


நாட்டுக்கு அரசன்; வீட்டுக்கு நாய்.

நாட்டுக்கு ஒரு தலைவன்; நாய்க்கு ஒரு எஜமானன்.

நாட்டுக்கு ஒரு மழை; நமக்கு இரண்டு மழை.

(ஓட்டைக் குடிசைக்காரன் கூற்று.)

நாட்டுக்குக் கரும்பு; வீட்டுக்கு வேம்பு

நாட்டுக்கு நல்ல துடைப்பம்;வீட்டுக்குப் பீற்றல் துடைப்பம். 13890


நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமை போகாது.

(தப்பாது.)

நாட்டுக்குப் பேச்சு; நாய்களுக்கு வார்த்தை.

நாட்டுக்குப் பொல்லான்; நாரணனுக்கு நல்லான்.

நாட்டுட்கு ராஜா; வீட்டுக்கு வேம்பு.

நாட்டுக் கோட்டைக் செட்டி, நாகபட்டினம் ராவுத்தர், மொட்டைப் பாப்பாத்தி மூவருக்கு மயிர்பிடி சண்டை நடந்தது போல. 13895


நாட்டுப் புறத்தான் மிட்டாய்க் கடையை விறைத்துப் பார்த்தது போல.

நாட்டை ஆளப் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது.

நாட்டைக் கலக்கி நாளில் நாட்டினாலும் நாய் வாலை நிமிர்த்த அரனாலும் முடியாது.

நாடி அறிவான் நமன் அறிவான்.

நாடிக் கொடுப்பாரைக் கூடிக் கெடுக்கிறதா? 13900

(கெடுக்கிறது.)


நாடிய பொருள் கைகூடும்.

(கம்ப ராமாயணம்.)

நாடிய வரம் எல்லாம் நல்கும் நாயகன்.

நாடு அறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் ஏன்?

(வேணுமா? சாட்சியா? + பின்குடுமி எதற்கு?)

நாடு அறிந்த பெருச்சாளி.

நாடு ஆண்டதும் பாண்டவர்; காடு ஆண்டதும் பாண்டவர். 13905


நாடு ஆளப் பிறந்தானா? காடு ஆளப் பிறந்தானா?

நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை.

(எங்கும் மெலிந்தால் கேடு ஏதும் இல்லை.)