பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

121



நாடு எல்லாம் உழைத்தாலும் நாய்வால் நேராகாது.

நாடு எல்லாம் பாதி; நாட்டை வாய்க்கால் பாதி ஜலம்.

நாடு ஏற்பன செய். 13910


நாடு ஓட நடு ஓடு.

(+ ஊர் ஓட ஒக்க ஓடு.)

நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகுமா?

(போகாது.)

நாடு காடு ஆயிற்று; காடு கழனி ஆயிற்று.

நாடு சுற்றியும் வீடு வந்து சேரவேண்டும்.

நாடு செழித்தால் கேடு ஒன்றும் இல்லை. 13915


நாடு செழித்தால் நாகரிகம் தானே வரும்.

நாடு பாதி; நங்கவரம் பாதி.

நாண் இல்லா நங்கை, பூண் இல்லா மங்கை.

நாணம் இல்லாக் கூத்தாடிக்கு நாலு திக்கும் வாசல்.

(சிறுக்கிக்கு நாலு புறமும்; நாணம் அற்றவனுக்கு.)

நாணம் இல்லாத பெண் நகைக்கு இடம் வைப்பாள். 13920


நாணம் இல்லாத கூத்தாடிக்கு நாலு திக்கும் கூத்தி.

நாணம் கெட்ட நாரி ஓணம் வந்தாள் வருவாளா?

நாணமும் அச்சமும் நாய்களுக்கு ஏது?

நாணமும் இல்லை; மானமும் இல்லை.

நாணி நடந்தாலும் மாமி குணம் போகுமா? 13925


நாணினால் கோணும்; நடந்தால் இடறும்.

நாணும் கால் கோணும்; நடக்கும் கால் இடறும்.

நாதமும் கீதமும் ஒத்திருப்பது போல வேதமும் போதமும் ஒத்திருக்க வேண்டும்.

நாதன் நாயைப் பிடித்தது போல.

நாதனின் பட்சம் ஆயிரம் லட்சம். 13930


நாதாரி வீட்டுக்கு நாலு பக்கம் வாசற்படி.

நாதி அற்றவன்.

நாதிக்காரன் பாதிக்காரன் போல.

நாம் ஒருவருக்குக் கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்.

நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். 13935


நாம் நாயை மறந்தாலும் நாய் நம்மை மறக்குமா?

நாமம் போட்ட குரங்கு ஆனாலும் நடுத்தெருவிலே போக முடியுமா?