பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தமிழ்ப் பழமொழிகள்



நாய்க்குப் பிறந்த நாயே.

நாய்க்குப் பிறந்தவனை இப்போதுதான் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

நாய்க்குப் பின்னால் வால் வளைவு; ஆனைக்கு முன்னால் கை வளைவு. 14055


நாய்க்குப் புண் வந்தால் நக்கும்; கோழிக்குப் புண் வந்தால் கொத்தும்.

நாய்க்குப் பூர்வ ஜன்ம வாசனை வந்தது போல.

நாய்க்குப் பெயர் முத்துமாலை; அதற்கு ஆக்கிப் படைக்கிறது வரகந் தவிடு.

நாய்க்குப் பெரிய தனம் தந்தால் விநாடிக்கு ஒரு தரம் கடிக்காதா?

நாய்க்கும் ஈக்கும் தடை இல்லை. 14060


நாய்க்கும் உண்டு சூல் அழகு.

(சூல் அழகிடும்.)

நாய்க்கும் உதவாது; நளவனுக்கும் உதவாது.

நாய்க்கும் தன் வீடுதான் பெரிது.

நாய்க்கும் தெளியும் நாலாம் மாதம்.

நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் ஆனால் உனக்கு என்ன ஆச்சு? எனக்கு என்ன ஆச்சு? 14065


நாய்க்கும் நாகத்துக்கும் தலை உயிர் நிலை.

நாய்க்கும் நாய்க்குடைக்கும் என்ன சம்பந்தம்?

நாய்க்கும் பருத்திக் கடைக்கும் என்ன சம்பந்தம்?

நாய்க்கும் பேய்க்கும் உறவு இல்லை.

நாய்க்கும் பேய்க்கும் கோவில் பெயராம். 14070


நாய்க்கு மட்டையோடு தேங்காய் கிடைத்தது போல.

நாய்க்கு மீசை முளைத்தால் நாவிதனுக்கு என்ன வேலை?

நாய்க்கு முழுத் தேங்காய் கிடைத்தாற் போல

(முழுத் தேங்காய் தக்குமா? தகுமா?)

நாய்க்கு முறை இல்லை.

நாய்க்கு மூத்தாள் தாய்க்கும் ஈயாள். 14075

(மூத்தாள்.)


நாய்க்கு வால் போனால் என்ன? கழுதைக்குப் பல் போனால் என்ன?

நாய்க்கு வாழ்க்கைப் பட்டால் குரைக்க வேணும்; பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்தில் ஏற வேணும்.