பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127

தமிழ்ப் பழமொழிகள்



நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப் பாலும் சோறுமா?

நாய் கெட்ட கேட்டுக்கு நடு வீட்டில் ஒரு சந்தியா?

நாய் கெட்ட கேட்டுக்குப் பூமரம் நிழலாம்.

நாய் கெட்ட கேட்டுக்கு மாமரத்து நிழல்; அது கெட்ட கேட்டுக்குப் புளி போட்ட கறி.

நாய் கெட்ட கேட்டுக்கு வெள்ளிக் கிழமை விரதமா? 14110


நாய் கெட்டால் குப்பையிலே.

நாய் கொடுத்ததாம் அரசு பதவி; சிங்கமும் அதை ஏற்றுக் கொண்டதாம்.

நாய் கொண்டு போன பானையை ஆர் கொண்டு போனால் என்ன?

நாய் கோவிலுக்குப் போவானேன்? கோவில் காத்தவன் தண்டம் இறுப்பானேன்?

நாய்ச் சகவாசம் சீலையைக் கிழிக்கும். 14115


நாய் சண்டை நாலே விநாடிதான்.

நாய் சத்திரத்திலே போனாலும் நக்குத் தண்ணீர்.

நாய் சந்தைக்குப் போகிற மாதிரி.

நாய் சந்தைக்குப் போச்சாம்; அங்கும் தராசுக் கோலால் அடிபட்டதாம்.

நாய் சந்தைக்குப் போய் மொந்தையடி வாங்கிற்றாம். 14120


நாய் சந்தைக்குப் போனதென்று நரியும் சந்தைக்குப் போனதாம்.

நாய் சாம்பலிற் சுருட்டினாற் போல.

நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா?

நாய் சிலிர்த்தால் நல்ல சகுனம்.

நாய் சொப்பனம் கண்டாற் போல. 14125


நாய்த் தூக்கம் போல.

நாய்த் தோல் செருப்பு ஆகுமா?

நாய்த் தோலில் கட்டி வரும் நல்லதொரு பெருங்காயம்.

நாய் தன் கடமையில் தவறியதென்று கழுதை ஆத்திரப் படுவானேன்?

நாய் தின்றதோ, நரி தின்றதோ, யார் கண்டார்கள்? 14130


நாய் துப்பட்டி வாங்கினாற் போல.

நாய் தொட்ட சட்டி நல்லதுக்கு உதவாது.

(சட்டிக்கு விமோசனம் ஏது?)

நாய் தொட்ட பாண்டம்.