பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தமிழ்ப் பழமொழிகள்



நாய் பின்னோடே நாலைந்து குட்டிகள்; பீப்பன்றிகள் பின்னோடே பத்தெட்டுக் குட்டிகள்.

நாய் பூபாளம் பாடுகிறது.


நாய் பெற்ற தெங்கம் பழம். 14165


நாய் பொல்லாதது ஆகுமா? நல்ல பசு மாடு ஆகுமா?

நாய் போல அலைகிறான்.

நாய் போல் அலைந்தாலும் நாலு காசு கிடைக்கும்.

நாய் போல் உழைத்தாலும் வாய்ச் சோறு இல்லை.

நாய் போல் ஏன் எறிந்து விழுகிறாய்? 14170

(எரிந்து.)


நாய் போல் குரைத்து நடுத் தெருவில் நிற்பானேன்?

நாய் மடி சுரந்தால் என்ன? சுரக்காமற் போனால் என்ன?

நாய் மலையைப் பார்த்துக் குரைத்ததாம்; பேய் மரத்தைப் பிடித்துக் குலுக்கிற்றாம்.

நாய் மனிதனைக் கடித்தால் அதற்காக மனிதன் நாயைக் கடிப்பதா?

நாய் மாதிரி இளைப்பு வாங்குகிறது. 14175


நாய் மாதிரி காத்துக் கிடந்தேன்.

நாய் மாதிரி சுருட்டிக் கொண்டு படுத்துக் கிட.

நாய் மாதிரி விழுவான்; நரி மாதிரி குழைவான்.

நாய் முகத்திலே மீசை முளைத்தால் அம்பட்டனுக்கு என்ன லாபம்?

நாய் முழுத் தேங்காயை உருட்டுகிற மாதிரி. 14180


நாய் முன் தின்னாதே; கொதி வந்து விடும்.

நாய் மூத்திரம் குத்துக் கல்லில்.

நாய் மேல் ஏறி வையாளி விட்டால் என்ன? வீழ்ந்தால் என்ன?

நாய் மேல் ஏறி வையாளி விட்டாற் போல.

நாய் மோப்பம் பிடிக்கிற மாதிரி. 14185


நாய் ராஜ்யத்தில் காதல் ஏது? கல்யாணம் ஏது?

நாய் ராஜாவுக்கு எச்சில் இலை கப்பம்.

நாய் வந்தால் நாழி எண்ணெய்க்குக் கேடு; பேய் வந்தால் ஒரு பிள்ளைக்குக் கேடு.

நாய் வயிற்றில் நரி பிறக்குமா?

நாய் வயிற்றில் நாலு; பன்றி வயிற்றில் பத்துப் பிறந்தது போல. 14190