பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

131



நாய் வயிற்றைப் போல்.

நாய் வளர்த்தால் நல்வழி காட்டும்.

நாய் வாசலைக் காத்து என்ன? கையில் இல்லாதவன் பணக்காரனைக் காத்து என்ன?

நாய் வாய்ச் சீலை போல.

நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா? 14195


நாய் வாய் வைத்தது போல.

(+ வேலையைச் செய்கிறது.)

நாய் வாயில் அகப்பட்ட முயல் போல.

நாய் வாயில் கோல் இட்டால் லொள் லொள் என்றுதானே குரைக்கும்?

நாய் வாயில் கோல் இடலாமா?

(கொடுத்தது போல, விட்டது போல.)

நாய் வாயில் நெய் சொட்டுகிறது என்றால் கேட்பவருக்கு மதி இல்லையா? 14200


நாய் வாயிலும் நாலு சோறு.

நாய் வாயை வைத்தது போல் வேலை செய்கிறது.

நாய் வால் அசைந்தாலும் பிடுங்க வராது.

நாய் வாலிலே தேன் வைத்தால் ஆருக்குக் கூடும்?

நாய் வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாற் போல. 14205

(புளிச்சையை வைத்து.)</small


நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?

(+ பொல்லாக் குணத்துக்கு நல்ல மருந்து உண்டா?)

நாய் வாலைக் குறை நீக்கலாமா?

நாய் வாலைக் கொண்டு சமுத்திரத்தை அடைக்கலாமா?

நாய் வாலை நறுக்க நாவிதன் வேண்டுமா?

நாய் வாலை நிமிர்த்தப் பேயால் ஆகுமா? 14210


நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது; பேய்க் காலைப் பார்க்கவும் முடியாது.

நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா?

(வாலை நம்பி ஆற்றைக் கடக்கலாமா? ஆற்றில் நீந்தலாமா?)

நாய் வாலைப் பிடித்துக் கொண்டு காவிரியைக் கடக்க முடியுமா?

நாய் வாழ்ந்தால் என்ன? உறி அறுந்தால் என்ன? 14215