பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தமிழ்ப் பழமொழிகள்



நாயே நல்லப்பா, பேயே பெரியப்பா.

நாயே பேயே, நங்கண்ண, செங்கண்ண, தாயார் வளர்த்த தறிதலையே, பாட்டுக்கும் உனக்கும் எவ்வளவு தூரம்?

நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமா? 14275


நாயை அடக்க நாலு பேர்; நாவை அடக்க நாலாயிரம்.

நாயை அடிக்கக் குறுந்தடி வேண்டுமா?

நாயை அடிக்காதே; நாய் முள்ளைச் சுமக்காதே.

நாயை அடித்த பாவம் குரைத்தால் போகுமா?

நாயை அடித்தால் காலைத் தூக்கும். 14280


நாயை அடித்தாலும் நாலு காசு கிடைக்குமா?

நாயை அடித்துப் பல்லியைப் பார்ப்பானேன்?

நாயை அடித்துப் போட்டது போல.

நாயை அடிப்பதற்கு நல்ல தடி வேண்டுமா?

நாயை அடிப்பானேன்? காலைக் கடிப்பானேன்? 14285


நாயை அடிப்பானேன்? காலைப் பிடிப்பானேன்?

நாயை அடிப்பானேன்? பல் இழிவு பார்ப்பானேன்?

நாயை அடிப்பானேன்? நடு வீடெல்லாம் கழிவானேன்?

நாயை அடிப்பானேன்? மலத்தைச் சுமப்பானேன்?

நாயை உசுப்பச் செய்து நரி உள்ளே நுழைந்து கொண்டது. 14290


நாயை எங்கே அடித்தாலும் காலில்தான் நோக்காடு.

நாயை ஏய்க்குமாம் நரி, அதையும் ஏய்க்குமாம் ஒற்றைக் கால் நண்டு.

நாயை ஏவினால் அது தன் வாலை ஏவுமாம்.

(ஏவுகிறது.)

நாயை ஓட்டிப் பேயைக் கூட்டி வந்தானாம்.

நாயை ஓட்டிவிட்டு நடுக் குப்பையில் உட்காரவா வேண்டும்? 14295


நாயைக் கட்டிக் கொண்டு அழுவது போல.

நாயைக் கட்டி மாரடித்து நல்ல மனிதனும் நாயாய்ப் போனான்.

நாயைக் கண்டா காயம் கரைக்கிறது?

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

நாயைக் கண்டால் நகர்ந்து போ. 14300


நாயைக் கண்டால் நரிக்கு லட்டுண்டை மாதிரி.

நாயைக் கண்டால் பேயும் விலகும்.