பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தமிழ்ப் பழமொழிகள்



நாயைப் போல் பல்லை இளிக்காதே.

நாயைப் போல் பாடுபட்டால் ஆனையைப் போல் அரசாளலாம்.

நாயையும் சூக் காட்டி முயலையும் எழுப்பி விடுவது போல.

நாயையே திருடன் அடித்துக் கொண்டு போனால் யார் ஐயா குரைப்பது?

நாயை வளர்த்தால் நல்ல வழி காட்டும்; பூனையை வளர்த்தால் பொட்டை வழி காட்டும். 14330


நாயை விரட்டிவிட்டு நடுவழியில் படு.

நாயை வெட்டிச் சூக் காட்டினாலும் அது தன் வாலை ஆட்டும்.

நாயை வைத்துக் கொண்டு தானே குரைத்தாற் போல்.

நாயோடு சேர்ந்தாலும் நல்ல முயல் கிடைக்கும்.

நாயோடு படுப்பானேன்? தெள்ளுப் பூச்சியோடு எழுந்திருப்பானேன்? 14335


நார் அற்றால் கூடும்; நரம்பு அற்றால் கூடுமா?

நார் அறுந்தால் முடியலாம்; நரம்பு அறுந்தால் முடியலாம்; மனம் அறுந்தால் முடியலாகாது.

நார் இல்லாமல் மாலை தொடுக்கலாமா?

நாரசிங்கமும் இரணியனும் போல.

நாரத்தங்காய்க்கு இட்ட உப்பும் நாத்தனாருக்கு இட்ட சாதமும் எவ்வளவானாலும் போதா. 14340


நாரத்தங்காய்க்குப் போடுகிற உப்பும் நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண் போகா.

(நாட்டுப் பெண்ணுக்கு.)

நாரத்தங்காய் விற்ற காசு கசக்குமா?

நாரத்தை காய்க்க நாய்ப்பலி இட வேண்டுமாம்.

நாரதா, கலகப்ரியா.

நாராசம் காய்ச்சி நடுச் செவியில் விட்டாற் போல். 14345

(பார்த்தாற் போல.)


நாராயணன் ஒருவன்தான்; இரண்டாமவன் ஒருவனும் இல்லை.

நாராயணன் குடுமியை நாராலே பின்னிக் கோபாலன் குடுமியைக் கோரையாலே பின்னி.

நாராயணன் கோவிலுக்கு நாலு வாசல்.

நாரும் பூவும் போல.

நாரை அறியாத குளமும் நமன் அறியாத உயிரும் உண்டோ? 14350